வீட்டில் இருக்கும் செல்வத்தை இரட்டிப்பாக்கும் கண்ணாடி! என்ன கண்ணாடி அது? கண்ணாடி எப்படி பணத்தை பெருக செய்யும்?

thaamboolam-miror-cash
- Advertisement -

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் கண்ணாடி நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும். மங்களகரமான பொருட்களுடன் தாம்பூலம் சேர்த்துக் கொடுக்கப்படும் கண்ணாடி ஒன்று உண்டு. அது மிக சிறிய அளவில் கைக்கு அடக்கமாக இருக்கும். அந்த கண்ணாடியின் ஓரங்களில் செல்லோ டேப் போட்டு ஒட்டி இருப்பார்கள். இதைத்தான் சாஸ்திரத்திற்கு மங்களப் பொருட்களுடன் இணைத்து கொடுப்பது உண்டு. இந்த கண்ணாடி பணத்தை எப்படி பெருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜைக்காக வைக்கப்படும் இந்த கண்ணாடி மிகவும் தெய்வீக அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது. வீட்டின் முகம் பார்க்கும் கண்ணாடி, அந்த வீட்டின் நல்ல அதிர்வுகளை உள்வாங்கும். அதனால் தான் தினமும் காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங்கையை பார்த்துவிட்டு, கண்ணாடியை பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அடிக்கடி கண்ணாடி உடைவது தோஷம் என்பார்கள். அமானுஷ்யமாக கண்ணாடியின் மூலம் உங்களுக்கு என்ன தோன்றினாலும், உடனே குலதெய்வத்தை தரிசித்து விட்டு வருவது நல்லது.

- Advertisement -

அந்த அளவிற்கு அதிக ஆற்றலை கொண்டுள்ள இந்த முகம் பார்க்கும் கண்ணாடி பூஜை அறையிலும் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. கண்ணாடியில் அருவமாக பிரதிபலிக்கும் குலதெய்வம் மற்றும் நம் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பதாக கூறப்படுகிறது. பூஜை செய்யும் பொழுது பூக்கள் கீழே விழுந்தால் நல்ல பலன்கள் கிடைக்க போகிறது என்பதை சகுனமாக கூறுவார்கள். அது போல கண்ணாடி என்பதும் நல்ல சகுணங்களை குறிக்கிறது.

பூஜை அறையில் கண்ணாடி ஒன்றை வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு தினமும் பூஜை செய்யும் பொழுது ஆரத்தி காண்பிக்க வேண்டும். ஆரத்தி எடுக்கும் பொழுது அதில் இருக்கும் ஜோதியானது கண்ணாடியில் பிரதிபலித்த வேண்டும். இவ்வாறு பிரதிபலிக்கும் பொழுது இறைவனுடைய அருள் பரிபூரணமாக தங்கு தடை இல்லாமல் நமக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும் முகம் பார்க்கும் கண்ணாடி என்பது நம் மனதில் இருப்பதையும் பிரதிபலிக்கும்.

- Advertisement -

நம் மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது முகத்திலும் கண்ணாடியின் மூலம் நமக்குத் தெரியும். மனதில் சோகம் இருந்தாலும் கண்ணாடியின் மூலம் அது புலப்படும். இப்படி நம்மை பற்றிய உண்மை நிலையை உணர்த்தும் கண்ணாடி எதையும் இரட்டிப்பாக்கி தரக்கூடிய அற்புதம் வாய்ந்த சக்தியும் கொண்டுள்ளது. இந்த சிறிய அளவிலான மங்கள கண்ணாடி பொருளை வைத்திருக்கும் இடத்தில், எதை வைத்தாலும் அது பன்மடங்கு பெருகுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. பணம் வைக்கும் இடங்களில் இந்த கண்ணாடியை வைத்தால் பணம் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

இதை வெறுமனே அப்படியே வைக்கக் கூடாது. இதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மஞ்சளை தெளித்து வைக்க வேண்டும். மகா சக்தி பொருந்திய இந்த சிறிய அளவிலான கண்ணாடியை நகை வைக்கும் இடங்களில் வைத்தால், நகை மேலும் சேரும் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் அடகு போகாமலும், அந்த நகை நம்மிடம் நிலையாகத் தங்கும். இத்தகைய சக்தி வாய்ந்த இந்த கண்ணாடியை நாமும் பணம், நகை வைக்கும் இடங்களில் வைத்து விட்டால் தேவை இல்லாமல் வீண் விரயம் ஆவது தடுக்கப்படும். மேலும் வருமானம் அதிகரித்து, அந்த இடத்தில் மேலும் இரட்டிப்பான பணத்தை வைக்கும் அளவிற்கு நம்முடைய நிலை உயரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -