சமையல் அறையில் இருக்கும் இந்த 3 பொருளுக்கு இவ்வளவு சக்திகள் உண்டா? பணத்தை ஈர்க்கும் மசாலா பொருட்களின் ரகசியம் தான் என்ன?

cash-sombu
- Advertisement -

சில மூலிகை பொருட்களை சமையலுக்கு சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பொருட்களுக்கு இருக்கும் சக்தி ஆன்மீகத்தில் அபரிமிதமானதாக இருந்து வருகிறது. குறிப்பாக செல்வத்தை அடையவும், பணத்தை பெருக செய்யவும் தாந்த்ரீக பரிகாரமாக பயன்படுத்தப்படும் இந்த மசாலா பொருட்கள் தன்னுள் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக் கொண்டுள்ளது. பணம் பெருக இவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அலச இருக்கிறோம்.

வாசனை மிகுந்த அத்தனை பொருட்களும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது. நல்ல நறுமணம் வீசும் இடத்தில் ஸ்ரீதேவி வாசம் செய்கிறாள். அதுவே துர்வாசனை நிறைந்துள்ள இடங்களில் மூதேவி வாசம் செய்கிறாள் என்பது நியதி. அழுக்கு படிந்த இடங்கள், தூசுகள் நிறைந்துள்ள பகுதிகள், சாக்கடை, தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் துர் தேவதைகளும், தரித்திரங்களும் பெருகும் எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாக, நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

வீட்டை சுற்றிலும் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேங்கிய தண்ணீர் வறுமையை உண்டாக்கும். கடன் பிரச்சினைகளை அதிகரிக்க செய்து விடும். இதனால் பணப்பற்றாக்குறை மற்றும் வருமான பாதிப்புகள், நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சோம்பு, கிராம்பு, ஏலக்காய் ஆகிய இந்த மூன்று வாசனை மிகுந்த மசாலா பொருட்கள் சமையலுக்கு மட்டும் அல்லாமல், பணத்தை ஈர்ப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.

சோம்பு சிறிதளவு, ஒன்றிரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்றாக கலந்து ஒரு மூட்டையாக வெள்ளைத் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் எங்கெல்லாம் பணத்தை வைப்பீர்களோ, அங்கெல்லாம் எப்பொழுதும் வாசனைக்காக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் வாசனை அந்த இடத்தில் பணத்தை மென்மேலும் பெருக செய்யும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனுடன் பச்சை கற்பூரம், பட்டை போன்றவற்றையும் சேர்க்கலாம். இது கூடுதல் பலன்களை கொடுக்கும். பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரத்துடன் இந்த மசாலா பொருட்கள் சேர்த்து வைத்தால் அந்த இடத்தில் பணம் பன்மடங்கு பெருகுவதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

பணம் வைக்கும் மணி பர்ஸ் அல்லது பீரோவில் கூட இப்படி பணத்துடன் மூட்டையாக கட்டி வைக்கலாம். பணத்துடன் இந்த வாசனை பொருட்கள் சேரும் பொழுது பணம் அங்கு வீண் விரயம் ஆகாமல் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் பணம் அதிகரிக்குமாம். அந்த அளவிற்கு உங்களுடைய வருமானம் பெருக துவங்கும் என்பது சூட்சமமாக குறிப்பிடப்படுகிறது.

பணத்துடன் இதை வைத்து விட்டால் போதுமா? என்று நினைத்து விடக்கூடாது. உங்கள் உழைப்பை முழுமையாக கொடுத்து பணத்துடன் இதை தாந்த்ரீக பரிகாரமாக செய்யும் பொழுது வீண் விரயம் ஆகாமல், உங்களுடைய உழைப்பு வீணாகி போகாமல் பணம் பெருகும் என்பது தான் இதன் உள்ள அர்த்தமாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது.

பணம் வைக்கும் பெட்டி, நகை வைக்கும் இடங்கள், மணி பர்ஸ், பூஜை அறை, பீரோ, தொழில் செய்யும் இடங்கள், கல்லாப்பெட்டி என்று நீங்கள் எங்கெல்லாம் பணத்தை வைப்பீர்களோ, அங்கெல்லாம் இந்த சிறு முடிப்பை எப்போதும் வைத்துக் கொண்டிருங்கள். அது போல அதன் வாசம் குறைய ஆரம்பித்ததும் மீண்டும் பிரஷ்சாக இதே போல செய்து வைக்க வேண்டும். இதனால் அள்ள அள்ள குறையாத செல்வமும், பணமும் உங்களிடம் வந்து சேரும்.

- Advertisement -