பணக்கஷ்டம் தீர கிராம்பு பரிகாரம்

mahalakshmi cash clove garland
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும் பண பிரச்சனை என்று வந்து விட்டால் அப்படியே வாழ்க்கையே முடக்கி போட்டது போல ஆகி விடும். இன்று எதை செய்ய வேண்டும் என்றாலும் எதை வாங்க வேண்டும் என்றாலும் பணம் அத்தியாவசிய தேவையாகி விட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் பணத்தட்டுப்பாடு வந்து விட்டால் குடும்பத்தில் இருக்கும் நிம்மதி கூட காணாமல் போய் விடும்.

பணம் இல்லாது போனால் வீட்டில் இருப்பவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாது. நம்முடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய தான் ஒவ்வொருவரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருப்பினும் இந்த தேவையை பலராலும் சரி செய்து கொள்ள முடிவதில்லை.

- Advertisement -

பணத் தேவையை சரி செய்து கொள்ளவும், பணம் நம்மிடம் தங்கி வீண் விரயம் ஆகாமல் இருக்கவும் வழிபட வேண்டிய ஒரு பரிகாரம் முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணத்தேவையை சரி செய்யும் பரிகாரம்
பணத் தேவையை சரி செய்ய வேண்டும் என்றாலே பணத்திற்கான தெய்வமான மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். மகாலட்சுமி தாயாரை வணங்கும் போது அவருக்கு உகந்த பொருட்களை வைத்து வணங்கும் போது நம்முடைய தேவைகள் உடனடியாக நிறைவேறும். அப்படி தாயாருக்கு உகந்த பொருள்களில் ஒன்று தான் கிராம்பு.

- Advertisement -

இந்த கிராம்புக்கு பண ஈர்ப்பு தன்மை அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. கிராம்பு வைத்து தாயாரை வணங்கும் போது நம்முடைய பணத்தேவையும் உடனடியாக சரியாகும். ஆகையால் தான் தாயாருக்கு கிராம்பு மாலை கட்டி போட்டு வழிபாடு செய்வார்கள். அந்த மாலை கட்டி போடும் விதமும், அதன் பிறகு அந்த மாலை என்ன செய்தால் பலன் அதிகரிக்கும் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

மகாலக்ஷ்மி தாயாருக்கு வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாள். ஆகையால் அன்றைய தினத்தில் இதை செய்வது சிறந்தது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை நிற நூலில் மஞ்சள் தடவி கொள்ளுங்கள். அதே போல 24 அல்லது 58 என்ற எண்ணிக்கையில் கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பு நல்ல நிலையில் உடையாமல் இருக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

இந்த கிராம்பை மாலையாக தொடுத்து அருகில் உள்ள தாயாரின் சன்னதிக்கு கொண்டு செல்லுங்கள். அங்கு தாயாருக்கு இந்த மாலையை சாற்ற சொல்லி வழிபாடு செய்யுங்கள். அதன் பிறகு இந்த மாலையை கையோடு வாங்கி வந்து கரையான் புற்று அதாவது பாம்பு புற்றில் இதை போட வேண்டும். இதை போடும்போது கவனமாக போடுங்கள். இதன் மூலம் பண ஈர்ப்பு தன்மை அதிகரித்து நம்முடைய பணத்தடை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

மனிதனின் கால் தடம் படியாத மண்ணிற்கு எப்போதும் தெய்வீக தன்மை அதிகம் உண்டு. அதனால் தான் பல பரிகாரங்கள் இந்த புற்று மண்ணை கொண்டு செய்யப்படுகிறது. அப்படியான இந்த இடத்தில் நாம் வழிபட்ட கிராம்பு சேர்க்கும் போது நம்முடைய பணத்தடை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டின் அருகில் இது போன்ற புற்று இல்லை என்றால் இந்த மாலையை கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அது மட்டும் இன்றி பணம் வைக்கும் இடத்தில் எப்போதும் கிராம்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் பணம் ஈர்ப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: காரடையான் நோன்பின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

உங்களின் விடாமுயற்சியோடும் உழைப்போடும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது பணம் ஈர்ப்பு தன்மை அதிகரிக்கும். பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்கு நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -