மனித வாழ்க்கைக்கு அடிப்படையான ஒன்று பணம். உயிர் வாழ காற்று, நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல இந்த பூமியில் மனிதனுக்கு நல்ல வாழ்க்கை வாழ பணம் மிகவும் அவசியமாகிறது. பணம் இருப்பவர்கள், பணம் இல்லாதவர்கள் இவர்களுக்கிடையே பலவித ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் எவர் ஒருவரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ அவர்களின் கை தான் மேலோங்கி இருக்கிறது. எனவே ஒருவர் அழிந்தாலும் தான் முன்னேற வேண்டும் என்ற ஆசை வருகிறது. அவ்வாறு பணம் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. ஒரு சிலரிடம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வருகின்ற பணம் கையில் தாங்காமல் போய்விடுகிறது. இதற்கு உங்கள் மீது இருக்கும் கண் திருஷ்டியும், எதிர்மறை எண்ணங்களும் கூட காரணமாக அமையலாம். இதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நமது முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் வழக்கங்களில் ஒன்று தான் பலிகொடுப்பது. வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுத்து வருவார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் தங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும், தங்கள் தலைமுறை சுகமாக வாழ வேண்டும், எந்த ஒரு தீமைகளும் தனது குடும்பத்தை நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
ஆனால் இவற்றைவிட சைவ பலி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பலியாகும். இதனை மாதத்திற்கு ஒரு முறை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். சைவ பலி கொடுப்பதற்கு ஏற்ற பொருட்களாக எலுமிச்சைபழம், ஊமத்தங்காய், பூசணிக்காய் போன்ற பொருட்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
எலுமிச்சை பழத்தை அறிந்து மஞ்சள், குங்குமம் தடவி வாசலில் வைப்பதை பலரும் பழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல் ஊமத்தங்காயை நிலை வாசல் படியில் தொங்கி விடுபவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு பூசணிக்காயை ஒவ்வொருவரும் வீட்டில் மற்றவர்களின் கண் படும்படி வைத்துள்ளனர். இவைகள் எல்லாம் கண் திருஷ்டியை அகற்றுவதற்கான நேர்மறை சக்திகளை கொண்டவையாக உள்ளன.
எனவே மாதத்திற்கு ஒரு முறை அமாவாசை நாளில் பூசணிக்காய்க்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக்கொண்டு, அதனை வீட்டைச் சுற்றியோ அல்லது வாகனத்தை சுற்றியோ அல்லது யாருக்கு வீட்டில் திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அவர்களை நிற்க வைத்து வலது புறம் மூன்று சுற்றும் இடது புறம் மூன்று சுற்றும் சுற்றி உடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் அழிந்து நடப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.
இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு முறை அமாவாசை அன்று தவறாமல் செய்து பாருங்கள். உங்களுக்கு உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர ஆரம்பிப்பீர்கள். உங்களிடம் பணம் கட்டுக்கட்டாய் புரள ஆரம்பிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். இவ்வாறு பணம் எந்த வழியிலாவது உங்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும்.