இந்த ஒரு படத்தை இந்த திசையில் மாட்டி வைத்தால் பண மழை பொழியுமா என்ன?

athirsta-lakshmi-cash
- Advertisement -

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்று கூறுவார்கள். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு அதிர்வலைகளை உண்டு பண்ணும் சக்தி இருப்பதால் அதனை பயன்படுத்தும் விதத்தில், நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் வந்து சேர்வதாக சாஸ்த்திரங்கள் குறிப்பிடுகிறது. உங்கள் வீட்டில் இந்த ஒரு படம் வைத்திருந்தால், அதை இந்த திசையில் மாட்டிப் பாருங்கள், செல்வ வளம் அதிகரிக்கும். அது என்ன படம்? எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும்? என்கிற சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

வீட்டில் இருக்கும் மங்களப் பொருட்கள் சிலவற்றை சரியான திசையில் நாம் வைத்துக் கொள்ளும் பொழுது நமக்கு அதிர்ஷ்டம் பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேரும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டோமானால் நம் வீட்டில் பணம் கொழிக்க செய்யும் பீரோ, கணவன் மனைவி பிரச்சனையைத் தீர்க்கும் முகக் கண்ணாடி, லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யும் துடைப்பம் போன்றவற்றை சரியான திசையில் வைக்கும் பொழுது நமக்கு அள்ள அள்ள குறையாத செல்வம் மழை பொழியும் என்கிற நம்பிக்கை உண்டு.

- Advertisement -

அது போல நம் வீட்டில் எப்போதும் மகாலட்சுமி உடைய படம் தனியாக வைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டகரமானது என்று கூறப்படுகிறது. மகாலட்சுமியின் திருஉருவ படத்தில் ஆந்தை இருப்பது போல சில படங்கள் உண்டு. பெரும்பாலும் வட மாநில மக்களால் இவ்வகையான மகாலட்சுமியின் திரு உருவ படங்களை அதிர்ஷ்ட லட்சுமி என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய இந்த ஆந்தை படம் உள்ள லக்ஷ்மி படமும், மஹாலக்ஷ்மியின் ஒரு அம்சம் தான்.

மகாலட்சுமி அள்ள அள்ள குறையாத செல்வத்தை நமக்கு அள்ளிக் கொடுக்கக் கூடியவர். அவரிடம் இருக்கும் நிதிகளில் நவநிதிகளை வாங்கிக் கொண்ட நம்முடைய குபேரருக்கு லட்சுமி குபேரர் என்கிற பெயரும் உண்டு. இந்த குபேரனுக்கு மிகவும் பிடித்த குபேர தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆந்தை உருவம் கொண்டுள்ள படத்துடன் கூடிய இந்த மகாலட்சுமியை உங்கள் வீட்டின் வடக்குத் திசையை பார்த்து மாட்டுவது நல்லது.

- Advertisement -

பின்னர் அந்த இடத்தில் வடக்குத் திசையாக ஒரு குபேர விளக்கு லட்சுமி அம்மனுக்கு முன்பு வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். வியாழன், வெள்ளி இந்த இரண்டு கிழமைகளிலும் வடக்கு திசையில் இருக்கும் இந்த மகாலட்சுமிக்கு குபேர தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு பொருளாதார ரீதியான தடைகள் உடைந்து, வருமானம் பன்மடங்கு பெருக துவங்கும்.

தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் எல்லாம் ஒழிந்து போய் நல்ல ஒரு வருமானம் ஈட்டக்கூடிய அமைப்பு உங்களுக்கு உண்டாகும். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த வறுமை அகன்று, செல்வ வளமானது செழிக்க துவங்கும். இதனை நம்பிக்கையோடு செய்து வருபவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு. எனவே உங்கள் வீட்டில் இந்த மாதிரியான மகாலட்சுமி படம் இருந்தால் அதனை வடக்கு திசையில் மாட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -