இந்த பையில் நீங்கள் ஒரு ரூபாய் பணத்தை வைத்தாலும் கூட அது பல லட்சங்களாக மாறும் அதிசயம் நடக்கும். பணம் நகை என எதை வைத்தாலும் அதை பல மடங்காக பெருக்கி தரும்.

mariyamman lethar cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் நாம் பணத்தை சம்பாதிப்பது மட்டுமே குறியாக இருந்து பாடுபட்டு சம்பாதிக்கிறோம். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை பெருக்குவதற்கான வழிகளை சரி வர தெரிந்து கொண்டால் நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய் கூட பல மடங்காக பெருகும் வாய்ப்பினை பெறலாம். இப்படி நம்முடைய பணம் பல மடங்காக பெருக கூடிய வாய்ப்பை அருளும் ஒரு அற்புதமான தகவலை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.

நம் வீட்டில் பெரியோர்களை நாம் சற்று கூர்ந்து கவனித்திருந்தால் பல விஷயங்களை  தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் பின்பற்றும் ஒவ்வொரு முறைக்கும் பல அர்த்தங்கள் இருக்கும். அது போன்றதொரு முறை தான் மஞ்சள் பையை பயன்படுத்துவது. முன் காலத்தில் எல்லாம் எல்லோர் கையிலும் மஞ்சள் பை இருக்கும். வெளியில் எங்கு சென்றாலும் நிச்சயம் மஞ்சள் நிற பை தான் கொண்டு செல்வார்கள். அதே போல் எந்த விசேஷமாக இருந்தாலும் அப்போதும் மஞ்சள் பையுடனே செல்வார்கள். ஒவ்வொரு விசேஷத்திலும் மஞ்சள் பையை கொடுப்பது வழக்கமாகவே இருந்தது.

- Advertisement -

இப்போது எல்லாம் மஞ்சள் பையை யாராவது வைத்திருந்தாலே அதை கேலிக்குரிய விஷயமாக பார்க்க தொடங்கி விட்டோம். இந்தப் பைக்கு இருக்கும் மகிமை யாருக்கும் தெரிவது இல்லை. இதில் வைக்கும் எதுவும் பல மடங்கு பெருகும் என்பது தான் இந்த பையின் மகிமையே. ஆகையால் தான் முன்பெல்லாம் பணம், நகை என எதை வைத்தாலும் மஞ்சள் பையில் சுருட்டி வைத்தார்கள். அது போல வீட்டு பத்திரம் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் மஞ்சள் பையில் தான் வைத்தார்கள். ஏனெனில் இந்தப் பையில் வைக்கும் நகை பணம் எப்படி பெருகிறதோ, அதை போல இதில் பத்திரங்களை வைக்கும் போது மேலும் சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகத்தையும் கொடுக்கும்.

மஞ்சள் நிறமானது புதன் கிரகத்திற்குரியது. புதன் பார்க்கின் கோடி நன்மை என்ற பொருளுக்கு ஏற்ப புதகிரகத்தின் அனுகிரகம் கிடைத்து விட்டால் பலவித நன்மைகள் நமக்கு ஏற்படும் என்பது அனைவரும் தெரிந்ததே. அந்த வகையில் புதன் கிரகத்தின் அனுகிரக நிறமான மஞ்சள் நிறத்தை கொண்ட இந்த மஞ்சள் நிற துணிப்பையில் நீங்கள் பணத்தை வைத்து எடுத்து புழங்கும் பொழுது அது நிச்சயம் பெருகுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். இதற்கு மஞ்சள் நிற துணிப்பையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வேறு பைகளை மஞ்சள் நிறத்தில் பயன்படுத்துவதால் எந்த பலனும் கிடைக்காது.

- Advertisement -

இப்போதெல்லாம் நாகரிகத்தின் பேரில் அதிக அளவில் லெதர் பையை தான் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. இந்த பையை மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தினாலும் கூட, இதில் பணத்தை வைக்கும் போது அது பெருகுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் திருமணம் போன்ற விசேஷங்களில் யாராவது ஒருவர் பெயர் பதித்த மஞ்சள் நிற பையை தந்தால் அதை நாம் பணம் நகை வைக்க பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதற்குரிய பலன் நமக்கு வராது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக சமயபுர மாரியம்மன் புகைப்படம் பதித்த மஞ்சள் நிற பை கிடைத்தால் மிகவும் விசேஷமானதாக சொல்லப்படுகிறது. அப்படி கிடைக்காதவர்கள் வேறு தெய்வங்களின் படங்கள் பதித்த பையும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து குறைபாடு நீங்க இனி நீங்கள் ஆயிரம் ஆயிரமாக செலவு செய்ய வேண்டாம். வாஸ்து நாளில் மிக எளிமையாக இந்த மூன்று தெய்வத்தை வணங்கினாலே போதும். சொந்த வீடு வாங்கும் யோகமும் விரைவில் வரும்.

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை நாமும் முறையாக தெரிந்து கொண்டு பின்பற்றினாலே பல வகையில் நன்மைகளை அடைய முடியும் என்பதற்கு இந்த மஞ்சள் பை ஒரு நல்ல உதாரணம். இந்த பதிவில் உள்ள மஞ்சள் பை குறித்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -