தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக போட்டு பூஜை செய்து இந்த மந்திர வார்த்தை சொல்லி வீடு முழுவதும் தெளித்தால் வீட்டில் நகை பணம் கொஞ்சமும் வற்றாமல் மேலும் மேலும் பெருகிக் கொண்டே செல்லும்.

mahalaskhmi money gold
- Advertisement -

எல்லா மனிதருக்கும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இந்த பணம் காசை சேர்க்க நியாயமான முறையில் உழைத்து சம்பாதித்து சேர்க்க வேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் என்ன தான் பாடுபட்டு உழைத்தாலுமே கூட எல்லோராலும் இப்படி சேர்த்து செல்வ நிலையை அடைய முடிவதில்லை. அது மட்டுமல்லாமல் சம்பாதிக்கும் பணத்தை விட செலவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இவையெல்லாம் சரி செய்து பணம் நகை எல்லாம் நம்மிடம் தங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று ஆன்மீகம் நமக்கு வழிகாட்டுகிறது. அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

வீட்டில் பணம், நகை அதிகமாக சேர:
பொன் பொருள் வீட்டில் அதிகமாக சேர்ந்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல முறையில் சம்பாதிப்பது, சோம்பல் இல்லாமல் உழைப்பது வீட்டில் நல்ல வார்த்தைகளை பேசுவது நல்ல எண்ணங்கள் மனதில் கொண்டு பிறருடன் நல்ல சிந்தனையோடு பழகுவது இவைகளை முறையாக செய்வது லட்சுமி கடாட்சம் பெருக வழி செய்யும்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் ஆசி நமக்கு கிடைத்து மேலும் பொன்னும் பொருளும் அதிகரிக்க, நாம் பணம் நகை வைக்கும் இடத்தில் எப்பொழுதும் அம்பாளின் அனுகிரகம் பெற்ற பொருள்களை வைத்திருக்க வேண்டும். அதாவது கிழங்கு மஞ்சள், பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மல்லிப்பூ இதில் மல்லி பூ மட்டும் வாடாமல் இருக்க வேண்டும். ஆகையால் தினமும் இதை மட்டும் மாற்றினால் நல்லது. இத்துடன் இந்த எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை எல்லா நாளும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்யும் நாளில் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். இதற்கென ஒரு சிறிய சொம்பை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். சில்வரை பயன்படுத்த வேண்டாம். இந்த சொம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அதில் எட்டு ரூபாய் நாணயத்தை போட்டு விடுங்கள். ஐந்து ரூபாய், ஒரு ரூபாய், பத்து ரூபாய் என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

- Advertisement -

இத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் மல்லிப்பூ, அனைத்தையும் போட்டு அந்த சொம்பின் மேல் உங்கள் கைகளை வைத்து மூடிய பின் மகாலட்சுமி தாயாரை நினைத்து ஓம் சுதர்சனாய நமஹ என்ற மந்திரத்தை 16 முறை ஜெபிக்க வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். அது மட்டும் இன்றி நீங்கள் பணம் நகை வைக்கும் இடத்திலும் இதை தெளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாராவாரம் வாசலில் தவறாமல் இந்த 1 விஷயத்தை செய்தால் வராத நிம்மதியும் தானாய் உங்க குடும்பத்தை தேடி வருமே! நிம்மதியான இல்லறத்திற்கு எளிய பரிகாரம்!

இதை தொடர்ந்து செய்து வரும் போது வீட்டில் பணம் நகை எல்லாம் தங்குவதற்கான வாய்ப்புகள் பெருகும். அது மட்டும் இன்றி இதையெல்லாம் நீங்கள் வாங்குவதற்கான யோகமும் உங்களுக்கு கிடைக்கும். எந்த ஒரு பரிகாரத்தையும் செய்யும் போது அதில் நம்பிக்கை வைப்பது மிக மிக அவசியம். நம்பிக்கையோடு முயற்சியும் சேரும் போது நிச்சயம் அதற்கான பலன் நமக்கு கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

- Advertisement -