வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து வைத்தால், பணத்தையும், நகையையும் தேடி நீங்கள் போக வேண்டாம், தானாகவே அவைகள் உங்களைத் தேடி வந்தே தீரும்.

- Advertisement -

பணமோ, நகையோ வேண்டாம் என்று சொல்பவர்கள் யாருமே இல்லை. இவை மட்டும் எவ்வளவு வந்தாலும் போதும் என்று சொல்லவே மாட்டார்கள். இந்த பணமும், நகையையும் நம்மை தேடி வரவும், நம் வசப்படவும், மகாலட்சுமியின் அருள் நமக்கு தேவை. மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க, அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்து ஒரு சிறிய எளிய பரிகாரத்தை செய்யும் போது, இவைகள் நமக்கு கிடைக்க மகாலட்சுமி தாயார் ஆசி வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள்கள் எப்படி வைத்து வணங்க வேண்டும் என்பதையெல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த பணமானது நம் கையில் தாராளமாக புழுங்கி, நகை, பணம் நம்மிடம் தங்க வேண்டும் என்றால், அதற்கு நிச்சயமாக மகாலட்சுமி தாயாரின் ஆசீர்வாதம் வேண்டும். மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களை நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வைக்க வேண்டும். அதற்கு தான் இந்த வெற்றிலை பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் கிடைத்து, நீங்கள் வேண்டும் பணம் நகையெல்லாம் உங்களை வந்து அடைய வழி பிறக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் கிடையாது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு தேவை ஒரு வெற்றிலை, புனுகு, அரகஜா, இந்து உப்பு, அருகம்புல், தர்ப்பை புல், மூன்று கொட்டை பாக்கு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் நூல். இந்த பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே இவை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செய்ய காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, உங்கள் பூஜை அறையில் மேற் சொன்ன பொருட்களை எல்லாம் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து, பணமும் நகையும் எங்களுக்கு தாராளமாக கிடைக்க வேண்டும் என்றும், அதை சம்பாதிக்கவும், சேர்க்கவும், உங்களின் அருள் வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டு, வெற்றிலையில் கொட்டை பாக்கு, அரகஜா, புனுகு, இந்து உப்பு, பச்சை கற்பூரம், கொஞ்சம் தர்ப்பை, கொஞ்சம் அருகம் புல் இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து வெற்றிலையை மடித்து காம்பு மேலே தெரியுமாறு மஞ்சள் நூலை வைத்து கட்டி, மகாலட்சுமி தாயாரின் முன் வைத்து வணங்கி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். இது ஒரு நாள் முழுவதும் உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும். அடுத்த நாள் இதை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம்.

- Advertisement -

வெற்றிலை காய்ந்தவுடன் வேறு புது வெற்றிலை மாற்றி அதையும் இதே போல் பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயார் இந்த வாசனை திரவியங்களுக்கு மயங்கி அங்கு வந்து அமர்ந்து கட்டாயம் உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவார்.

இதையும் படிக்கலாமே: தலைவாசலில் இந்த முடிச்சு இருந்தால் கெட்ட காற்று கூட உங்கள் வீட்டிற்குள் வீசாது. வீட்டை சுற்றி எப்போதும் நல்ல தேவதைகளும் நல்ல சக்திகளும் நடமாட தொடங்கிவிடும்.

இந்தப் பொருள் உங்களிடம் வந்த பிறகு உங்களின் தொழில், வியாபாரம் எதுவாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் அடைந்து, உங்கள் வளர்ச்சி மேலும் மேலும் பெருகி உங்களிடம் பணம் சேர்வதற்கான வாய்ப்புகளை வாரி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து செல்வ செழிப்புடன் வாழுங்கள்.

- Advertisement -