தலைவாசலில் இந்த முடிச்சு இருந்தால் கெட்ட காற்று கூட உங்கள் வீட்டிற்குள் வீசாது. வீட்டை சுற்றி எப்போதும் நல்ல தேவதைகளும் நல்ல சக்திகளும் நடமாட தொடங்கிவிடும்.

vasal-lakshmi-door
- Advertisement -

ஒரு இடத்தில் கெட்டது வந்து குடியேறிவிட்டால், அந்த இடத்தில் இருக்கும் நல்லது தானாக வெளியே சென்று விடும். இதுதான் இயல்பு. எப்போதுமே கெட்டதை எதிர்த்து போராட கூடிய நல்லதை, நாம் பூஜித்து கொண்டே இருக்க வேண்டும்.‌ இதற்காகத்தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் சாமி கும்பிட வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும். ஹோமங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் நம்முடைய வீட்டையும் நம் வீட்டில் இருப்பவர்களையும் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியிடம் இருந்து, கெடுதலில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பூஜை புனஸ்காரங்கள் செய்யும் போது நம்முடைய வீட்டிற்கு எந்த அளவுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறதோ, அதே அளவுக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்தை செய்தால். பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து பரிகாரம் செய்ய தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையே மங்களகரமாகத்தான் இருக்கும். வீடும் சுத்தபத்தமாக தான் இருக்கும்.

- Advertisement -

நிலை வாசலில் மாட்ட வேண்டிய முடிச்சு:
குலதெய்வத்தை நினைத்து ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சமாக புனுகு தடவி விட வேண்டும். அதில் ஒரு துண்டு பச்சை கற்பூரம், 2 ஏலக்காய், சிறிதளவு சோம்பு, வைத்து முடிச்சாக கட்டி இதை அப்படியே நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும். நிலை வாசலுக்கு வெளிப்பக்கமும் இதை கட்டலாம். நிலை வாசலுக்கு உள்பக்கமும் இதை கட்டலாம். அது உங்களுடைய சவுகரியம்.

நிலை வாசலின் வலது பக்கத்தில் இந்த முடிச்சை கட்டுவது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிச்சுக்குள் இருந்து வெளிவரக்கூடிய நல்ல வாசனை உங்களுடைய வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியையும் நுழைய விடாது. காற்றின் மூலமாக கூட வீட்டிற்குள் எந்த தவறும் நுழைந்து விடாது. கண் திருஷ்டி கொண்டவர்கள், பொறாமை குணம் கொண்டவர்கள் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்தாலும் அவர்களுடன் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அப்படியே இந்த முடிச்சிக்குள் இருக்கக்கூடிய பொருட்டுக்கள் ஈர்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கு ஊதுபத்தி காண்பித்தால் மட்டும் போதும். இதற்காக பெரிய பூஜைகள் எல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த முடிச்சிலிருந்து வெளி வரக்கூடிய வாசம் எப்போது குறைகிறதோ, அப்போது இந்த முடிச்சை மாற்றினால் மட்டும் போதும். இந்த முடிச்சை கட்டிய உடனே உங்களுடைய வீட்டிற்குள் ஒரு தெய்வ கடாட்சம், லட்சுமி கடாட்சம் நுழைந்து விடும். நீங்கள் வேண்டுமென்றால் இந்த எளிமையான பரிகாரத்தை ஒருமுறை செய்து தான் பாருங்களேன். அப்போதுதான் பரிகாரத்தில் இருக்கும் பலன் உங்களுக்கு புரியும்.

இதையும் படிக்கலாமே: வாடகை வீட்டை மாற்றும்போது மறக்காமல் இந்த 1 பொருளை கையோடு எடுத்து வாருங்கள். நீங்கள் வாழ்ந்த வாடகை வீட்டிலிருந்த அதிர்ஷ்டமும், சந்தோஷமும், உங்களுடனே புதுசாக குடியேறும் வீட்டிற்குள் வந்துவிடும்.

ஆன்மீகம் என்பது நம்மால் அடைய முடியாத ஒரு விஷயம் அல்ல. நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையில் தான் இந்த ஆன்மீகமே அடங்கி இருக்கிறது. எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செய்யுங்கள். ஒரு கைப்பிடி மண்ணை கடவுளாக நினைத்து எடுத்து வேண்டினால் கூட, அந்த மண் உங்களுக்கு வேண்டிய வரத்தை கொடுக்கும். நம்பிக்கை இல்லாமல் தங்கச் சிலையை வைத்து பூஜை செய்தாலும் பலன் இல்லை. அதுதான் ஆன்மீகம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -