பணம் நிரந்தரமாக நமது கையில் தங்க இந்த பரிகாரங்களை செய்தால் மட்டும் போதும்

panam
- Advertisement -

நமது கைக்கு வரும் பணத்தை எப்பொழுதும் பூஜை அறையில் வைக்கக் கூடாது. ஏனென்றால் பணம் பல்வேறு நபர்களின் கைகளுக்குச் சென்று மாறி மாறி வந்திருக்கும். பூஜை அறை என்பது தெய்வத்தன்மை மிகுந்த இடமாக இருக்கும். எனவே அங்கு இந்த பணத்தை வைக்க கூடாது. ஒவ்வொருவரும் தனது வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் பல்வேறு பூஜைகள், பரிகாரங்களை பண வரவிற்காக செய்வதுண்டு. ஆனால் அவை அனைத்துமே பலனளிக்கும் என்று சொல்லமுடியாது. அவற்றில் சில பூஜைகள் ஒரு சிலருக்கு பலன் அளிக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு இந்த பரிகாரங்கள் அனைத்தும் பலன் தருவதாக இல்லை. அவ்வாறு அனைவருக்கும் பயன்தரக்கூடிய சில பரிகாரங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்றைய சூழ்நிலையில் பணம் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சாவியாக இருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்கள் முதல், ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்தையும் வாங்குவதற்கு பணத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை தேடி ஓட வேண்டிய நிலைமைதான் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

- Advertisement -

பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க, வீட்டின் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு வீட்டின் வடக்கு சுவரில் எப்பொழுதும் ஒரு ஜன்னல் இருக்க வேண்டும். அதேபோல் வீட்டின் கதவு சிறிதளவாவது மூடப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வீட்டின் ஜன்னல் முழுவதுமாக திறந்து இருக்க வேண்டும்.

வீட்டில் பணம் சேர்வதற்கு வடக்கு திசையும், வீட்டு ஜன்னலும் எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ அதேபோல தென்மேற்கு திசையும் பணவரவிற்கு முக்கிய அமைப்பாக அமைகிறது. பணத்தை எப்பொழுதும் இந்த தென்மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். பீரோ வடக்குப் புறமாக அதாவது பீரோவின் பின்புறம் தென்திசை நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு படத்தை எப்பொழுதும் மரப் பெட்டியில் வைக்க வேண்டும். தேக்கு மரம் அனைத்தையும் தன்னிடம் தேக்கி வைத்துக்கொள்ளும், என்பதால் தான் தேக்கு என பெயர் வந்தது. எனவே இந்த தேக்கு மரப்பெட்டியில் பணத்தை வைக்கும் பொழுது எப்பொழுதும் பணம் அதில் இருந்து கொண்டே இருக்கும். அதேபோல் ஒரு சிலர் சம்பளம் வாங்கி வந்ததும் அதனை பூஜை அறையில் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் நமது வீட்டின் பூஜை அறையின் தெய்வத் தன்மை குறைய காரணமாகவும் இருக்கிறது. ஒரு சிலர் பணத்தை சிக்கனம் பிடிப்பதாக எண்ணி செலவு செய்யாமல் அதனை இறுக்கிப் பிடித்து வைத்திருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்கள் பணத்தை இறுதிவரை அனுபவிக்க முடியாமல் போய்விடும். அதே போல் எப்பொழுதும் பணக்காரர்கள் என்ற நினைப்புடன் பணத்தை செலவு செய்து பழகுங்கள். அப்போது உங்களிடம் பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

பல பெட்டியில் பணத்தை வைக்கும் பொழுது 2000 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டு இவற்றை சிவப்புத் துணியில் மடித்து வைக்க வேண்டும். அதேபோல் ஒருவரிடம் பணத்தை கொடுக்கும் பொழுது பணத்தை மடித்து, மடிப்பு பகுதி அவர்களை பார்த்தவாரும், திறப்புப் பகுதி நம்மை பார்த்தவாறும் இருக்கும்படி கொடுக்க வேண்டும். எப்பொழுது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் நல்ல நறுமணம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -