உங்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த மகாலட்சுமி பூஜை செய்தால் தீராத கடன் தீர்ந்து, பணம் மள மளவென்று சேர ஆரம்பிக்கும்

lakshmi
- Advertisement -

ஏழை முதல் பணக்காரர்கள் வரை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் இருக்க தான் செய்கிறது. இந்த செலவுகளை காட்டிலும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் சக்திக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை கடனாக வைத்திருக்கின்றனர். கடன் வாங்குவது பெரிதல்ல, அதனை திருப்பிக் கொடுக்கும் பொழுது ஏற்படும் கஷ்டங்கள் தான் மனதையும், உடலையும் பலம் இல்லாமல் செய்துவிடுகிறது. ஏனென்றால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனாலும், வட்டி கட்ட முடியாமல் போனாலும் அப்பொழுது ஏற்படுகின்ற மன உளைச்சல் காரணமாக குடும்ப சூழ்நிலையிலும் சரியான கவனம் செலுத்த முடியாது, வேலையிலும் சரியான கவனம் செலுத்த முடியாது, அனைவரிடமும் அன்பாக பேச முடியாது, எப்பொழுதும் கோபத்துடனும், சிந்தனையுடனும் இருக்க வேண்டி இருக்கும். இவ்வாறு ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை முழுமனதுடன் வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்க காரணம் இந்த கடன் தொல்லை தான். இப்படிபட்ட கடன் தொல்லைகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒரு சிலருக்கு நல்ல வேலை இருக்கும், ஆனால் கையில் வந்த பணம் உடனே செலவாகிவிடும். ஒரு சிலருக்கு வேலையும் சரியாக இருக்காது, பணமும் சரியான நேரத்திற்கு கையில் வராது, ஒரு சிலர் எவ்வளவு தொகையை வருமானமாக வாங்கினாலும் அந்தப் பணம் வந்த இடம் தெரியாமல் கரைவதற்கு அதற்கான செலவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

இவ்வாறான பிரச்சினைகள் முழுவதுமாக தீர்வதற்கு நம்மிடம் பணத்தை ஈர்ப்பதற்கான லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும். அவ்வாறு எவரிடம் லக்ஷ்மி கடாட்சம் இருக்கிறதோ, எவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்துள்ளதோ அந்த வீட்டின் பீரோவிலும், அவர்களது பர்ஸிலும் எப்போதும் சிறிதளவு பணமாவது இருக்கும். பெரிய அளவில் பண கஷ்டம் என்பது அங்கு நீடிக்காது.

எனவே பணம் வீட்டில் தங்குவதற்கு முதலில் லட்சுமிதேவியின் அருள் இருக்க வேண்டும். இவ்வாறு மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு வீட்டின் பூஜை அறையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய ஒரு சிறப்பு பூஜை இருக்கிறது. இந்த பூஜையை தொடர்ந்து 12 வாரங்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கிறது.

- Advertisement -

அதற்காக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறை மற்றும் வீடு முழுவதையும் சுத்தமாக துடைத்துவிட்டு, பூஜை பொருட்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் வெற்றிலை பாக்கு பழம் வைக்க வேண்டும்.

அதன் பின்னர் சிறிதளவு சில்லறை நாணயங்களை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அருகே ஒரு கண்ணாடி டம்ளரை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, ஊதுபத்தி ஏற்றி வைக்க வேண்டும். பிறகு பூஜை அறையின் முன் அமர்ந்து கொண்டு, கண்களை மூடி மகாலட்சுமி தேவியே பற்றி என்று இருபத்தி ஒரு முறை சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு இருபத்தியோராம் நாள் இறுதியில் கோவிலுக்கு சென்று சுண்டல், பொங்கல் போன்ற ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியமாக கொடுத்து வரவேண்டும்

- Advertisement -