நீண்ட ஆயுள் கிடைக்க, வருமானம் உயர ஆடி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க! கஷ்டம் தீர்ந்து பணம் புழங்க செய்யும் வழிபாடு என்ன?

amman-cash
- Advertisement -

இவ்வருடம் ஆடி மாதம் அமாவாசை உடன் கூடி வருவது ரொம்பவே விசேஷமானது. ஆடி முதல் நாளும், கடைசி நாளும் அமாவாசையாக இருக்கிறது. நீண்ட ஆயுள் கிடைக்கவும், வருமானம் உயரவும் ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இதனால் உண்டாகக் கூடிய பலன்கள் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆடி மாதம் அடிக்கிற காற்றில் அம்மியே நகரும் என்கிற பழமொழி ஒன்று உண்டு. காற்றும், மழையும் பொழிந்து விவசாயம் செழிக்க கூடிய இந்த ஆடி மாதத்தை இறை வழிபாடுகள் செய்து இறைவனை மனம் குளிர செய்வது தான் நம் முன்னோர்கள் வழக்கம். தீராத நோயெல்லாம் தீரவும, லாபம் பெருகவும் ஆடி மாதத்தில் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆடி மாதத்தில் அன்னதானம் செய்தால் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். முடிந்த அளவிற்கு அன்னத்தை தானம் செய்ய பாருங்கள்.

- Advertisement -

ஆடி மாதம் துவங்கியதும் வீடு, வாசல்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்து வேப்பிலை, மாவிலை கொண்டு தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். இதனால் காற்றில் பரவும் கிருமிகள் வீட்டிற்குள் நுழையாது என்பது நம்முடைய நம்பிக்கை. வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து தினமும் கோலம் போடுவது நன்மை தரும். மேலும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கும் எளிய பரிகாரமாகவும் இருக்கும்.

ஆடி மாதம் தொடங்கியதும் துளசி வழிபாடு செய்வது இன்னும் விசேஷமானது. வேப்பிலை மற்றும் துளசி இலைகளை வீட்டில் எப்பொழுதும் வளர்ப்பது அம்மனுடைய அருளை பெற்றுக் கொடுக்கும். இந்த வேப்பிலை மற்றும் துளசி செடிக்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து மாலையில் விளக்கேற்றி வந்தால் குடும்பத்தில் நோய் நொடிகள் அண்டாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆடி மாதத்தில் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கிற்கு அடியில் கொஞ்சம் வேப்பிலைகளை வைத்து ஏற்றுங்கள். அது போல எல்லா விஷயங்களிலும் வேப்பிலைகளை பயன்படுத்துங்கள்.

- Advertisement -

தினமும் வேப்பிலை சாறு மற்றும் துளசி சாறு கொஞ்சம் பருகி வர உடல் நலன் மேம்படும். உடலில் இருக்கக்கூடிய தீவினைகள், கிருமிகள் ஒழியும். வருமானம் பெருக பணம் வைக்கும் இடங்களில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு வையுங்கள். இதனுடன் பணத்தை ஈர்க்கக்கூடிய பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொஞ்சம் பணத்துடன் எப்பொழுதும் சேர்த்து வையுங்கள். இவை நீண்ட நாட்களுக்கு நல்ல ஒரு நறுமணத்தை கொடுக்கும். நல்ல நறுமணம் இருக்கும் இடங்களில் எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம். மேலும் இவை மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களாக இருக்கிறது. ஒருமுறை செய்து வைத்தால் வாசம் நீங்கும் வரை அப்படியே விட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே:
உங்களிடம் குண்டுமணி தங்கம் இருந்தாலே போதும். அதன் மீது இதை ஒரே ஒரு சொட்டு தடவி விட்டால் நீங்களே வேண்டாம் என தடுத்தாலும் உங்களை தேடி தங்கம் வந்து கொண்டே இருக்கும்.

திடீரென வரக்கூடிய செலவுகளை கட்டுப்படுத்துவது, மருத்துவ செலவுகள், வாகன பராமரிப்பு செலவுகள் என்று அனாவசியமாக வரக்கூடிய வீண் விரயங்களை தடுத்து நிறுத்தி சுபச் செலவுகளை பெருக செய்யக் கூடிய சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. இப்பொருளை ஒன்றாக சேர்த்து பணம் வைக்கும் கல்லாப்பெட்டி அல்லது பீரோ போன்ற இடங்களில் எப்பொழுதும் வையுங்கள். அதுவும் ஆடி மாதத்தில் சில துளசி இலைகளையும், ஒன்றிரண்டு வேப்பிலைகளையும் சேர்த்து வையுங்கள். நோய் நொடிகளும் நீங்கும், பணமும் பெருகும்.

- Advertisement -