திடீர் பணவரவு கிடைக்க ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரம்

deepam
- Advertisement -

பிரச்சனை என்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு விஷயமாகும். அதிலும் பணப் பிரச்சனை என்பது பொதுவாகவே பலருக்கும் இருக்கின்ற ஒரு நெருக்கடியான பிரச்சனையாகும். நமது வருமானத்தை விடவும் அதிகமான செலவுகள் இருந்தால் அதற்காக கடன் வாங்கி செலவு செய்கிறோம்.அவவ்வாறு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும்போது மனக்கவலைகள் அதிகமாகின்றது. இந்த சூழ்நிலையில் நமது வாழ்க்கையையும் சந்தோஷமாக வாழ முடியாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க முடியாது. இவ்வாறு பணத்தினால் ஒருவரின் வாழ்க்கையே வெறுமையாக மாறிவிடுகிறது. எனவே இந்த பண வரவை ஈர்க்கும் ஒரு பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று செய்வதன் மூலம் சிறந்த பலனைப் பெறமுடியும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

cash

புதன்கிழமை:
பொதுவாகவே புதன்கிழமை என்று சொன்னால் பொன்னும் பொருளும் சேரும் தினமாக கருதப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அவ்வாறு புதன்கிழமை என்றாலே அதற்கு தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன. எந்த ஒரு காரியத்தையும் புதன்கிழமையன்று துவங்கினால் அது நன்மையில் முடியும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த புதன்கிழமையோடு சேர்ந்து வரும் பவுர்ணமி தினம் மிகவும் சக்தி வாய்ந்த தினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பௌர்ணமி:
பௌர்ணமி தினத்தன்று பிரபஞ்சம் முழுவதுமே நேர்மறை சக்தி வாய்ந்ததாக இருக்கிறது அவ்வாறு இந்த பௌர்ணமி தினத்தன்று எவ்வித பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைத்து பரிகாரம் செய்கின்றோமோ அந்த பூஜைக்கான பலன்கள் பல மடங்காக கிடைக்கின்றது. இவ்வாறு பௌர்ணமி தினத்தன்று பிரச்சனை தீர நமது வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறை.

pournami

முதலில் மஞ்சளை நீரில் குழைத்து பிள்ளையார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு குங்குமபொட்டு மற்றும் மலர் வைத்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ஏலக்காயை ஊசி நூலில் கோர்த்து மாலையாக செய்து மகாலட்சுமி படத்திற்கு சாற்ற வேண்டும். பூஜை அறை முழுவதும் மிகவும் வாசத்துடன் சுத்தமாக மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து லட்சுமி கடமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் வைக்கும் தீர்த்தத்தில் ஒரு ஏலக்காய், ஒரு துளசி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் முப்பெருந்தேவியர் வாசம் செய்யும் வெற்றிலைகளை ஏழு எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை சுத்தமாக கழுவி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகல்விளக்கை சுத்தம் செய்து அதற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு வைக்க வேண்டும்.

vetrilai

பிறகு செம்பு, பித்தளை அல்லது வெள்ளியில் செய்த தாம்பூலத் தட்டை எடுத்துக்கொண்டு அதற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதன் மீது ஏழு வெற்றிலைகளை பரவலாக அடுக்கி வைக்கவேண்டும். பின்னர் அதன்மீது ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் இவற்றில் ஏதேனும் ஒருசில பழங்களை வைத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு கற்கண்டையும் சேர்த்து வைத்து, தட்டின் நடுவே தீபத்தை வைக்க வேண்டும்.

vetrilai-deepam1

பிறகு சிறிய அளவு தொகையை 100 ரூபாய் அல்லது 200 ரூபாயுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து நூற்றியோரு ரூபாயாக வைத்துவிட வேண்டும். பிறகு தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அதன் பின் சிறிதளவு மலர்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஓம் ஸ்ரீ மகாலட்சுமிதேவியயே நம் என 108 முறை சொல்லி தீபத்திற்கு மலர் பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் திடீர் பண வரவு அதிகரிக்கும், கடன் பிரச்சினைகள் தீரும், நிரந்தர வேலை கிடைக்கும், இவ்வாறு அனைத்து செல்வங்களும் நம்மை தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -