எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் போதவே இல்லையா? போதும் போதும் என்கிற அளவிற்கு பணம் பெருக இதை செய்யுங்கள்!

thulasi-cash
- Advertisement -

பணம் தான் பணத்தை ஆகர்ஷிக்கும் என்பது சூட்சம விதியாகும். பணம் இருக்கும் இடங்களில் தான் அது மென்மேலும் சேர்ந்து கொண்டே செல்லும். ஒரு சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும், அவருக்கு தேவையான பணம் கைகளில் இருப்பது இல்லை. போதும் என்று சொல்ல முடியாத ஒரு விஷயம் தான் ‘பணம்’. எவ்வளவு கொடுத்தாலும் அதற்குரிய செலவுகளும், திட்டமிடலும் நம்மிடம் இருக்கும். இவ்வளவு பணம் இருந்தால் எனக்கு போதும் என்று நீங்கள் நினைத்தால் கூட அந்தப் பணம் நிஜமாக உங்களிடம் வரும் பொழுது இன்னும் வேண்டும் என்று தான் உங்கள் மனம் ஏங்கும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்கிற பழமொழி எல்லாம் இதனால் தான் வந்ததோ, என்னமோ! அந்த அளவிற்கு பணத்தின் மீதான ஈர்ப்பு ஒரு மனிதனுக்கு அதிகம் இருந்தால் அவன் செய்ய வேண்டியவை என்ன? என்கிற சூட்சமத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

money4

ஒரு மனிதன் எதன் மீது அதீத பிரியம் கொள்கிறானோ அது அவர்களை விட்டு செல்வது இல்லை. பணத்தின் மீதான விருப்பம் தான் அவர்களை மென்மேலும் பணக்காரன் ஆக மாற்றுகிறது. இவ்வளவு இருந்தால் போதும் என்று நினைத்து விட்டால் அவ்வளவு தான் உங்களிடம் சேரும். பணத்தை சம்பாதிக்க வேண்டும்! எப்படியாவது சம்பாதிக்க வேண்டும்! என்று முழு முயற்சியுடன் முயற்சி செய்தால் நிச்சயம் அது இந்த பிரபஞ்சத்தின் மூலம் உங்களிடம் வந்து சேரும்.

- Advertisement -

பணத்தை எப்பொழுதும் தேக்கு மரப் பெட்டியில் வைத்தால் மென்மேலும் பெருகும் என்பார்கள். தேக்கு தேக்கி வைக்கும் என்பதால் அதில் எந்த பொருளை நீங்கள் வைத்தாலும் அதிலேயே அதனை தேக்கி வைத்துக் கொள்ளும். அந்த பணமானது தேவையற்ற வீண் விரயங்களை செய்யாது. திரைப்படத்தில் கூறுவது போல அம்பானி ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டால் தான், குறைந்தது சூப்பர் மார்க்கெட் முதலாளியாவது ஆக முடியும்.

pant-pocket-money

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறினார் ஆனால் பணத்தின் மீதான ஆசை ஒரு பொழுதும் துன்பத்தைத் தருவது இல்லை ஆனால் அது நேர்மையான ஆசையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதித்த பணம் எப்பொழுதும் நிலைக்காது. நீங்கள் பணம் வைக்கும் இடமானது மிகவும் முக்கியம்! பணத்தை ஆண்கள் பேண்ட் அணிபவர்கள் ஆக இருந்தால் நீங்கள் பின்பக்கமாக பணத்தை எப்பொழுதும் வைக்கக் கூடாது, அவ்வாறு வைத்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கைகளில் பணம் தங்காமல் போய்விடும். மகாலட்சுமிக்கு உரிய மரியாதை கொடுக்கும் பொழுது தான் அது உங்களிடம் இருக்க விரும்பும் எனவே சட்டை பாக்கெட்டில் உங்கள் இதயத்திற்கு அருகில் பணத்தை எப்போதும் வையுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் பூஜை அறையில் வில்வ பழத்தை வைத்து பூஜை செய்து பாருங்கள், வில்வம் தன ஆகர்ஷணம் உண்டு பண்ணக்கூடிய ஒரு அற்புத கனி ஆகும். சிவனுக்கு உகந்த இந்த வில்வ கனியை திங்கள் கிழமைகளில் சிவலிங்கத்திற்கு படைத்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் எத்தகைய தடைகளாக இருந்தாலும் அவைகள் நீங்கி செல்வமானது மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்லும்.

salagrama kal

ஒருவருடைய வீட்டில் சாலகிராமம், வலம்புரி சங்கு, ருத்ராட்சம், வில்வம், வெள்ளெருக்கு விநாயகர் போன்ற பொருட்கள் இருந்தால் நிச்சயம் அவர்கள் இல்லத்தில் செல்வமானது பன்மடங்கு பெருகும். மேலும் கோமாதா பூஜை செய்வது, துளசி மாடம் வைத்து பூஜிப்பது போன்ற விஷயங்களும் செல்வத்தை பெருக்கும். எப்பொழுதும் உங்கள் சட்டை பாக்கெட்டில் பணத்துடன் துளசி இலைகளை வைத்துக் கொண்டு செல்லுங்கள், செல்லும் காரியம் தடையில்லாமல் வெற்றியாகும், பணம் விரயம் ஆகாமல் மென்மேலும் சேரும்.

- Advertisement -