பணம் பெருக மண் பரிகாரம்

man pariharam
- Advertisement -

செல்வ செழிப்பு என்று நாம் கூறும்பொழுது நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பணம்தான். பணம் இல்லாமல் எந்தவித செல்வத்தையும் நம்மால் பெற முடியாது என்ற ஒரு நிலை ஆளாகி விட்டது. மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் போய் பணத்திற்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் காலமாக மாறிவிட்டது. அதனால்தான் இன்றைய வாழ்க்கையில் அனைவரும் பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பணத்தை பெருகச் செய்வதற்கு செய்யக்கூடிய எளிய மண் பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நம்மை சுற்றி இருக்கக்கூடியது பஞ்சபூதங்கள். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தால் தான் நாம் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது நின்றாலோ நம்மால் இயங்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. நாம் இருக்கும் இடத்தில் இருக்கும் மண் சிறப்பாக இருந்தால் நாமும் சிறப்பாக இருப்போம் என்பது உண்மை. அப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த மண்ணை வைத்து எப்படி பணத்தை பெருக செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

நம்மை சுற்றி பல கோவில்கள் இருக்கின்றன. அதிலும் ஒரு சில கோவில்கள் மிகவும் பிரபலமாக திகழக்கூடியவையாக இருக்கும். அப்படிப்பட்ட கோயில்களுக்கு நாமும் அடிக்கடி சென்று வருவோம். அது மட்டுமல்லாமல் ஒரு சில கோயில்கள் மிகவும் பிரபலமடைந்து பணக்கார கோவிலாகத்திகழும். எடுத்துக்காட்டாக பழநீ, திருச்செந்தூர், திருப்பதி, சமயபுரம், ஸ்ரீரங்கம் இப்படி நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இந்த மாதிரி மிகவும் பிரபலமான வசதி மிக்க கோவில்களுக்கு நாம் செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் தெய்வத்திடம் மனதார நாம் வேண்டிக் கொண்டு 11 ரூபாயை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட்டு “உன்னுடைய மண்ணை எடுத்துக்கொண்டு செல்கிறேன் எனக்கு உறுதுணையாக இருந்து பணவரவை பெருகித் தருவாயாக” என்று வேண்டுதல் வைத்துவிட்டு ஒரு கைப்பிடி அளவு மண்ணை அந்த கோவிலில் இருக்கும் எடுத்து வீட்டிற்கு வர வேண்டும். வந்த உடனேயே நம் வீட்டில் நாம் வளர்க்கும் செடிகளில் அந்த மண்ணை கலந்து விட வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக தெய்வீக அம்சம் பொருந்திய செடிகளில் தான் கலக்க வேண்டும். எடுத்துக்காட்டாக துளசி, வேப்ப மரம், மருதாணி, கற்றாழை போன்ற செடிகளில் இருக்கக்கூடிய மண்ணில் இந்த மண்ணையும் கலந்து வைத்து விட வேண்டும். அந்த இடத்தில் இருக்கக்கூடிய மண்சக்தியான நேர்மறை சக்தியை நம் வீட்டிற்கு நாம் எடுத்து வருவதன் மூலம் நம் வீட்டிலும் அந்த நேர்மறை சக்தி அதிகரிக்கும். அதன் மூலம் நமக்கு பணவரவு ஏற்படும். இந்த செயலை நாம் செய்யும் பொழுது யாரிடமும் இப்படி நான் செய்தேன் அதனால் எனக்கு இந்த பலன் கிடைத்தது என்பதை கூறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: அடமானத்தில் இருக்கும் தங்க நகையை மீட்டெடுக்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இந்த எளிமையான மண் பரிகாரத்தை நாம் உண்டியலில் 11 ரூபாய் காணிக்கையாக செலுத்திய பிறகு தான் எடுத்து வர வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்கள் வீட்டில் பண வரவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -