வீண் செலவு வராமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! முன்னோர்களும் இதைத்தான் செய்தார்கள் தெரியுமா?

manjal-pai-mahalakshmi
- Advertisement -

நம் வீட்டில் எப்பொழுதும் பணம், செல்வம் நிறைந்து இருக்க நம் எண்ணங்களும், செயல்களும் நமக்கு நிறைவு தருபவையாக முதலில் இருக்க வேண்டும். நம்முடைய எண்ணங்கள் சரியாகத்தான் இருக்கிறது, செயல்களும் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று நமக்கு தோன்றும் பொழுது மகாலட்சுமி நம்மை தேடி ஓடி வந்து விடுவாள். நம் கையில் இருக்கும் பணம் வீணாக செலவு செய்யாமல், மேலும் அதிகரிக்க செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? நம் முன்னோர்கள் இதற்காக என்ன செய்தார்கள்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

எண்ணங்களும், செயல்களும் சரியாக இல்லாத கெட்டவர்களிடம் கூட பணம் நிறைய இருக்கிறதே? மகாலட்சுமி அவர்களிடம் எப்போதும் குடி கொண்டிருக்கிறாள்!! என்பது நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வியாக இருக்கிறது. எப்போதும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நாம் இப்போது செய்யும் செயல்களுக்கு இப்போதே பலன் கிடைப்பது இல்லை. இப்போது செய்யும் பாவங்களும் அப்படித்தான்.

- Advertisement -

இன்று செய்த பாவங்களுக்கு எதிர்காலத்தில் தண்டனைகள் அனுபவிக்கின்றனர். அதே போல இன்று செய்யும் புண்ணியங்களுக்கும் உடனே உங்களுக்கு பலன் கிடைக்காமல் போனாலும், பின் நாட்களில் உங்களுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக கிடைத்தே தீரும்! இதைத்தான் ‘கர்மா’ என்கிறோம். கர்மா என்றால் கொடியது என்று நினைக்கிறோம். அது அப்படி கிடையாது. கர்மா என்பது நாம் செய்து முடித்த வினையை குறிக்கிறது. நல்லது, கெட்டது இரண்டுமே சேர்ந்தது தான் கர்மா.

புண்ணியங்களுக்கான பலனை புண்ணிய கர்மா என்றும், பாவங்களுக்கான பலனை பாவகர்மா என்றும் கூறுவார்கள். அதனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இப்போது இருக்கும் நிகழ்காலத்தில் நீங்கள் உங்களுடைய சிந்தனையையும், செயல்களையும் சரியாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு துன்பம் வந்தாலும், இறைவனை நினைக்க மறந்ததில்லை. அவருக்கு செய்ய வேண்டிய எல்லா விஷயங்களையும் தொடர்ந்து செய்து வருவார்கள்.

- Advertisement -

அவர்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து வீட்டில் ஒரு மஞ்சள் பையில் போட்டு வைப்பார்கள். நிறங்களுக்கும் தோஷங்கள் உண்டு. நீங்கள் பணத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்தும் அது சேருவதும், செலவாவதும் உண்டு. நம்முடைய முன்னோர்கள் சம்பாதித்த பணம் முழுவதும் மஞ்சள் கையில் போட்டு சுவாமி அறையில் வைத்திருப்பார்கள் அல்லது பீரோவில் சுவாமி படத்தின் முன்பு பத்திரமாக வைத்திருப்பார்கள். இதுபோல மஞ்சள் துணியில் நீங்கள் பணத்தை வைக்கும் பொழுது கண்டிப்பாக உங்களிடம் பணம் வீண் விரயம் ஆகாது என்பது சாஸ்திர நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதனால் தான் நம் முன்னோர்கள் கட்டு கட்டாக பணத்தை வைத்திருந்தாலும் அதை பெட்டியில் போட்டு பூட்டி வைக்காமல், மஞ்சள் பையில் பத்திரமாக வைத்து கொண்டு செல்வார்கள். அதே போல நாமும் மங்களகரமாக இருக்கக்கூடிய ஒரு மஞ்சள் பையில் எப்போதும் பணத்தை வைக்க, நமக்கு மேலும் மேலும் பணத்தை பெருக செய்யும் ஒரு அற்புதமான எளிய பரிகாரமாக இருக்கும். பீரோவில், பூஜை அறையில், லாக்கரில் எங்கு நீங்கள் பணம் வைத்தாலும் சரி, மஞ்சள் நிற துணி பையில் அல்லது மஞ்சள் நிற காட்டன் துணியில் பணத்தை வைத்து முடிந்து வையுங்கள். இது உங்களுக்கு வீண் விரயம் ஆகாமல், பணத்தை சுப காரியங்களுக்கு செலவு செய்து நல்ல விஷயங்களுக்கு பயன்படக்கூடிய வாய்ப்புகளை தரும். ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

- Advertisement -