பணம், பொருள் சேர பூஜை அறையில் இந்த ஒரு பொருளும் வைத்திருக்கிறீர்களா? என்பதை பாருங்கள்!

gajalakshmi-cash
- Advertisement -

பூஜை அறையில் முந்தைய காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் இப்போது மாறி இருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழமையை நாம் மறக்கும் போது அங்கு லட்சுமிகரம் குறைகிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு பொருட்களிலும் லக்ஷ்மிகரம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் பணம், பொருள் சேர பூஜை அறை, சமையல் அறையில் நாம் இந்த பொருட்களை எல்லாம் வைத்திருக்கிறோமா? என்பதை கவனிக்க வேண்டும்! அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

arisi-alavai

பொதுவாக சமைக்கும் சமையலறையில் அரிசி அளக்கும் அரிசி படி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அரிசி படியில் அன்னபூரணி முழுமையாக நிறைந்து காணப்படுகிறாள். அதனால் தான் அதனை வணங்கி விட்டு ஒவ்வொரு முறையும் அரிசியை எடுக்கிறோம். நம் முன்னோர்களும் இம்முறையில் தான் அரிசியை எடுத்து வந்தனர். இதனால் நம் குடும்பம் மட்டுமல்லாமல், நமக்கு அடுத்து வரும் சந்ததியினரும் வறுமை இல்லாமல் வாழ்வார்கள் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது எனவே அரிசி அளக்கும்படி உங்களிடம் இல்லை என்றால் நிச்சயம் வாங்கி வையுங்கள்.

- Advertisement -

அடுத்து அரிசி புடைக்கும் முறம். இப்போது பிளாஸ்டிக்கில் முறம் போன்ற வடிவங்களில் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அரிசி புடைக்கும் முறத்தில் மகாலட்சுமி இருப்பதாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர் எனவே பிளாஸ்டிக் முறத்தை தவிர்த்து அரிசி புடைக்கும் பழைய இயற்கை முறத்தை வாங்கி வைத்து பயன்படுத்துவது லக்ஷ்மி வாசத்தை அதிகரிக்க செய்யும்.

salladai

அடுத்ததாக சமையலறையில் உமி நீக்க பயன்படுத்தும் சல்லடை முதல் அம்மி, ஆட்டுக்கல் வரை அனைத்தும் லட்சுமியின் அம்சமாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர். இவற்றை நாம் பயன்படுத்தா விட்டாலும் கூட நம்மிடம் இவை இருப்பது லக்ஷ்மி வாசத்தை அதிகரிக்க செய்யும். சிறுக சிறுக பழமையை நோக்கி பயணிக்கும் பொழுது நம் வளர்ச்சியும் அதிகரித்து வருவதை நம்மால் இன்று உணர முடிகிறது. அந்த வகையில் இந்த சில பொருட்களும் நம் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.

- Advertisement -

பூஜை அறையில் எப்போதும் பித்தளை பொருட்கள் அதிகம் இருக்க வேண்டும். காசு, பணம் இருக்கிறது என்பதற்காக வெள்ளி பொருட்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தாமல் பித்தளை, செம்பு போன்ற பொருட்களையும் சேர்த்து பயன்படுத்துவது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க செய்யும். பணம், பொருள் அதிகம் சேர கட்டாயம் பூஜை அறையில் செம்பு பொருட்கள் இருக்க வேண்டும்.

sembu-sombu

செம்பு எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் வலிமை பெற்றவை. முந்தைய காலங்களில் கோவில் குளத்தில் செம்பு நாணயங்களை வீசுவதை நாம் பார்த்திருப்போம். செம்பு நாணயங்கள் தண்ணீரில் கலந்து செம்பு சத்து அந்த தண்ணீருக்கு கிடைக்கும். இதனால் குளத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு செம்பு சத்து கிடைத்து பல்வேறு நோய்களும், பிணிகளும் தீரும் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும். எனவே செம்பு பொருட்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். செம்பு குடத்தில் தண்ணீர் வைத்து பருகுவது, செம்பு கலசத்தில் தீர்த்தம் வைத்து பூஜைக்குப் பயன்படுத்துவது, செம்பு தட்டு, செம்பு பாத்திரம் என்று செம்பு சேர்க்கப்பட்ட பூஜை பொருட்கள் வைத்திருக்க அள்ள அள்ள குறையாத செல்வநிலை பெருகும்.

- Advertisement -