பணம் சேர பச்சை பேனா பரிகாரம்

cash sleeping man
- Advertisement -

இந்த உலகையே ஆட்டிப்படைக்க கூடிய பிரம்மாண்டமான சக்தி உண்டெனில் அது நிச்சயம் பணம்தான். காசே தான் கடவுளடா என்ற வார்த்தை மருவி இன்று கடவுளை விட ஒரு படி அதிகமாக இந்த பணத்தை மதிக்க தொடங்கி விட்டோம். அந்த அளவிற்கு பணம் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. அப்படியான இந்த பணத்தை வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பணத்தின் தேவையானது ஒவ்வொருவருக்கும் அதிகப்படியாக இருக்கிறது. அந்த பணம் அதிகமாக நம்மிடம் சேர சில வழிமுறைகள் உள்ளது. அதில் ஒரு அற்புதமான தாந்திரீக பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பணம் சேர எழுத வேண்டிய வார்த்தை

இது ஒரு தாந்த்ரீக பரிகாரம் இதற்கு எந்த ஒரு வழிபாடு பூஜை புனஸ்காரம் எதுவும் இல்லை. இதற்கு நீங்கள் வாங்க வேண்டியது கோடு போடாத வெள்ளை நிறத்தால் கொண்டு நோட்டு பச்சை நிற பேனா. இந்த நோட்டில் பச்சை பேனாவை கொண்டு நாம் ஒரு வார்த்தையை தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு 11 முறை எழுத வேண்டும்.

உங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் உடனடியாக தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நோட்டில் இன்று எனக்கு இருபதாயிரம் ரூபாய் பணம் கிடைத்தது என்று எழுத வேண்டும். இதையே 11 முறை தொடர்ந்து மனதார நினைத்து எழுத வேண்டும்.

- Advertisement -

இந்த வார்த்தையை அவரவர் தெரிந்த மொழியில் எழுதுங்கள். ஆனால் ஒரே போல தான் எழுத வேண்டும் ஒரு சின்ன எழுத்து பிழை கூட எழுதும் பொழுது வரக் கூடாது .இதை எழுதிய பிறகு நீங்கள் நேரடியாக உறங்க தான் செல்ல வேண்டும் அதற்கு அதன் பிறகு யாரிடம் பேசுவதோ தொலைபேசியை பார்ப்பது மற்ற பொழுது போக்குகளில் நேரத்தை செலவழிப்பது கூடாது.

இதை எழுதிய பிறகு நீங்கள் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டே நீங்கள் எழுதிய தொகை எவ்வளவு 20,000 என்று வைத்துக் கொள்வோம். 100 ரூபாய் கட்டு உங்கள் கையில் இருப்பதாகவும் அந்த 100 ரூபாயில் 20 ஆயிரம் ரூபாயாக எண்ணுவதாகவும் உங்கள் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு அப்படியே உறங்கி விடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ எழுதுங்கள் என்றவுடன் வருமானம் வருவதற்கு வழியே இல்லாத நிலையிலும் ஒரு லட்சம் வர வேண்டும் என்று எழுதினால் எல்லாம் அது நடக்காது. 5 முதல் 50 ஆயிரம் வரை எழுதலாம். இதை வீட்டில் இருக்கும் பெண்களும் செய்யலாம். அவர்களுக்கு பணம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தும் அல்லது அவர்கள் கணவர் மகன்கள் மூலமாக பணம் கைக்கு வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் முழு நம்பிக்கையுடன் இது செய்தால் நமக்கு நிச்சயமாக பணம் வரும் என்ற நம்பிக்கையுடன் தான் எழுத வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தாலும் அது பலனை தராது என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரமானது நம்முடைய எண்ணத்தையும் பிரபஞ்சத்தின் எண்ண அலைகளையும் ஒன்றிணைத்து நமக்கு திருப்பி தரக்கூடிய ஒன்று. ஆகையால் உங்களுடைய எண்ணங்கள் முதலில் தெளிவாகவும் சீராகவும் இருக்க வேண்டும். அது மிக மிக முக்கியம். பணம் வருவதற்கு இப்படி ஒரு வழி இருக்கிறதா? அப்படி என்றால் நாங்கள் உழைக்கவே வேண்டாமே என்ற கேள்வி எழும்.

உழைத்தும் பணம் வரவில்லை என்று புலம்புபவர்கள் எத்தனையோ பேர்.இந்த பரிகாரத்தின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நமக்கு நெடுங்காலமாக வராமல் இருந்த தொகை வரலாம் புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் பெருகலாம்.

இதையும் படிக்கலாமே: துன்பங்களை நீக்கும் துர்க்கை அம்மன் மந்திரம்

இப்படி நல்ல முறையில் பணம் நம்மை வந்து சேர்வதற்கான வாய்ப்புகளை இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -