துன்பங்களை நீக்கும் துர்க்கை அம்மன் மந்திரம்

durgai manthiram
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு வகையான துன்பங்கள் நிறைந்திருக்கும். துன்பமில்லாத மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ரீதியாக துன்பங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட துன்பமாக இருந்தாலும் அந்த துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டில் துர்க்கை அம்மன் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த மந்திரம் குறித்த பதிவில் எந்த மந்திரத்தை கூறி துர்க்கை அம்மனை வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் பார்க்க போகிறோம்.

பொதுவாக துன்பங்களை நீக்கக்கூடிய தெய்வம் என்பதால் தான் இந்த அம்மனை துர்க்கை அம்மன் என்று கூறுகிறோம். செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடும் பெண்கள் பலர் இன்றளவும் இருக்கிறார்கள். எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வைத்து துர்க்கை அம்மனுடைய அபிஷேக ஆராதனைகளை பார்த்து வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஆலயம் சென்று வழிபட இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே எளிமையாக மந்திரத்தை கூறி வழிபட முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்க வேண்டும். இந்த மந்திர வழிபாட்டிற்கு துர்க்கை அம்மன் படம் கண்டிப்பான முறையில் தேவைப்படும். வீட்டில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு துர்க்கை அம்மனுக்கு பிடித்தார் போல் சர்க்கரை பொங்கலோ அல்லது எலுமிச்சை பபழ சாதமோ இவை இரண்டில் ஏதாவது ஒன்றை நிறைவேத்தியமாக வைக்க வேண்டும்.

இப்படி செய்ய இயலாதவர்கள் கற்கண்டைக்கு கூட நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம். இரண்டு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு துர்க்கை அம்மனுக்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு அமர்ந்து

- Advertisement -

“ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே ரட்சிணி ஸ்வாஹா”

என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதற்கு முன்பாக விநாயகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டு 11 ரூபாயை அவருடைய திருவடியின் கீழ் குருதட்சணையாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

முதல் முறை மட்டும் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதும் மறுநாளில் இருந்து நாம் தினமும் இந்த மந்திரத்தை 11 முறை மட்டும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி வைத்துவிட்டு கூறினால் போதும். இந்த மந்திரத்தை தினமும் கூறுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் தூள்தூளாகும். வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர சொல்ல வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை அனுதினமும் நம்பிக்கையுடன் உச்சரித்து துர்க்கை அம்மனின் அருளால் துன்பமில்லாத வாழ்க்கையை பெறுவோம்.

- Advertisement -