ஓடி ஓடி உழைத்து ஓடாய் தேய்ந்தாலும் ஒரு ரூபாய் கூட கையில் இல்லையே என்று வருந்துபவர்கள் ஐந்து ஜாதிக்காயை வைத்து வெள்ளிக்கிழமை காலையில் இதை செய்தால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் பணம் உங்களைத் தேடி வரும்.

cash jathikai
- Advertisement -

பணம் சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்த பணத்தை சேமித்து நல்ல ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான். இது தவறு என்று சொல்லவும் முடியாது. நியாயமான முறையில் உழைத்து சம்பாதித்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது தவறு ஒன்றும் கிடையாது. என்ன தான் ஓடி ஓடி உழைத்து நியாயமாக சம்பாதித்தாலும் எல்லோராலும் முன்னேற முடிவதில்லை.

பணத்தைக் கூட எப்பாடு பட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால் சம்பாதித்த பணத்தை வைத்து நல்ல முறையில் முன்னேறுவது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு அசாத்தியமான ஒன்றாக தான் உள்ளது. இது போன்ற சூழ்நிலை மாறி நாம் நல்ல முறையில் சம்பாதிக்கவும், பணம் வரவு அதிகரிக்கவும், சம்பாதித்த பணத்தை கொண்டு நல்ல செல்வந்தரான வாழ்க்கை வாழவும் இந்த பரிகார முறை நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பணம் சேர குபேர வசிய பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஐந்து ஜாதிக்காயும் கொஞ்சம் பச்சை கற்பூரமும் இத்துடன் ஒரு மண் தட்டு மட்டும் தேவை. இதை வெள்ளிக்கிழமை காலையில் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். ஆகையால் வியாழன் அன்றே இந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து எப்பொழுதும் போல் பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு காலை ஆறிலிருந்து ஏழு சுக்கிர ஹோரையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மண் தட்டில் பச்சைக் கற்பூரத்தை நிரப்பி வைத்து விடுங்கள். அதற்கு மேல் இந்த ஐந்து ஜாதிக்காயும் வைத்து பூஜை அறையில் குபேரர் படம் இருந்தால் அங்கு வைத்து விடுங்கள். இல்லையெனில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்து விடுங்கள். இந்த நேரத்தில் தாயாருக்கு பால் பாயாசத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த ஜாதிக்காயும், பச்சைக் கற்பூரமும் பூஜை அறையில் இருக்க வேண்டும். மறுநாள் காலை சனிக்கிழமை ஆறிலிருந்து ஏழு சனி ஓரையில் விளக்கு ஏற்றி வைத்து வணங்கிய பிறகு இந்த பொருளை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் அப்படியே இந்த மண் தட்டுடனே வைத்து விடுங்கள். இதை வியாபாரம் செய்யும் இடத்தில் கூட வைக்கலாம். அங்கும் பணவரவு அதிகரித்து வியாபாரம் பெருகும்.

இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பச்சை கற்பூரம் காற்றில் கரையக் கூடியது. இது முழுவதுமாக கரைத்த பிறகு இந்த ஜாதிக்காய் கால் படாத இடத்தில் போட்டு விட்டு, மறுபடியும் இதே போல் வேறு செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஜாதிக்காய் பணவரவை அதிகரிக்க கூடிய பொருள்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதே போல் பச்சை கற்பூரத்திற்கும் பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம். இவை இரண்டும் ஒன்று சேரும் போது அந்த இடத்தில் வற்றாத பண வரவு இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கூழாங்கல்லை வீட்டில் இப்படி வைத்தால் கூரை வீடாக இருந்தாலும் அங்கே பணம் கொட்டும். நிறைவான செல்வ வளத்தை தக்க வைத்துக் கொள்ள, தெரிந்து கொள்ள வேண்டிய பரிகாரம்.

பணம் சேர்ந்து செல்வந்தராக வேண்டும் எனில் அங்கு நமக்கு குபேரர் மகாலட்சுமி தாயாரின் அருள் கட்டாயமாக தேவை. இந்த பரிகாரத்தின் மூலம் இருவரையும் நாம் மகிழ்வித்து பணவரவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -