கூழாங்கல்லை வீட்டில் இப்படி வைத்தால் கூரை வீடாக இருந்தாலும் அங்கே பணம் கொட்டும். நிறைவான செல்வ வளத்தை தக்க வைத்துக் கொள்ள, தெரிந்து கொள்ள வேண்டிய பரிகாரம்.

mahalashmi
- Advertisement -

கூரை வீடாக இருந்தால் அங்கே மகாலட்சுமி தங்க மாட்டாளா. மனநிறைவும், சந்தோஷமும், எந்த இடத்தில் நிறைவாக இருக்கின்றதோ அந்த இடத்தில் மகாலட்சுமி நிலையாக தங்கி விடுவாள். எந்த வீட்டில் வாஸ்து குறையில்லாமல், எல்லாம் அந்தந்த இடத்தில் சரியாக இருக்கின்றதோ, அந்த இடத்திலும் மகாலட்சுமி நிலையாக தங்குவாள். அந்த காலத்தில் கூரை வீட்டில் வாஸ்து பார்த்தார்களா? என்று சில பேர் கேட்கலாம். ஆனால், கூரை வீடாக இருந்தாலும் எந்த இடத்தில் சமைக்க வேண்டும், எந்த இடத்தில் உறங்க வேண்டும் என்ற நுணுக்கங்களை நம்முடைய முன்னோர்கள் அறிந்து வைத்து உள்ளார்கள். ஆனால் இந்த காலத்தில் பங்களா வீடு கட்டினாலும் அதை சில பேர் சரியாக செய்வதில்லை. சமைத்து வைத்த சாப்பாட்டை எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அது நல்லது கிடையாது.

அப்படியே வாஸ்து சாஸ்திரங்களை சரியாக செய்தாலும் அவை எல்லாம் சரியான நேர்கோட்டில் இயங்குவது கிடையாது. காரணம் டெக்னாலஜி, இடமின்மை, வசதி இல்லாத காரணத்தினால் வாஸ்துவை நம் இஷ்டத்திற்கு மாற்றி விட்டோம். சரி, எதுவாக இருந்தாலும் சரி. நீங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும், சொந்த வீட்டில் இருந்தாலும், உங்களுடைய வீட்டு வாஸ்து உங்களுக்கு ஏதோ ஒரு கோளாறு தருகிறது. வீட்டில் செல்வ கடாட்சம் இல்லை என்றால், என்ன செய்வது. இதோ எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு வழி உங்களுக்காக.

- Advertisement -

பணம் தரும் கூழாங்கல் பரிகாரம்:
தண்ணீருக்கு அடியில் இருந்து எடுக்கக்கூடிய பொருள் கூழாங்கல். எப்போதும் குளிர்ச்சி தன்மை கொண்டது. இதைக் கொண்டு வந்து வீட்டில் வைத்தால், வீட்டில் நெருப்பு போல எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை, வாஸ்து தோஷம் எல்லாம் அணைந்து விடும்.

4 பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுல் கட்டாயம் கண்ணாடி அல்லது பீங்கானில் இருக்க வேண்டும். அந்த பவுலில் ஒவ்வொரு கைப்பிடி அளவு கூழாங்கல் போட்டு, அது நிரம்ப கொஞ்சம் தண்ணீரை ஊற்றி உங்கள் வீட்டிற்குள் நான்கு திசையிலும் நான்கு மூலையிலும் இந்த பவுலை வைத்து விட வேண்டும். வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

வரவேற்பறையில் நான்கு கார்னரிலும் இந்த நான்கு பவுலை வைத்து விட்டால் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தாக்கம் குறையும். வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் வெளியேறிவிடும். வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதன் மூலம் பெரிய பாதிப்பு ஏற்படாது. வீட்டில் மகாலட்சுமி நிம்மதியாக நிரந்தரமாக தங்குவாள்.

இந்த நான்கு பவுலில் இருக்கும் தண்ணீரை மட்டும் வாரம் ஒரு முறை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு தேவை என்றால் இந்த கூழாங்களுக்கு நடுவே மணி பிளான்ட் அல்லது வேறு ஏதாவது அழகா பூச்செடி அல்லது பூக்களை வைத்து கூட வரவேற்பு அறையில் அலங்காரம் செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: இந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வந்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இதை பார்க்கும் போதே வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும். சந்தோஷமும் நிம்மதியும் வீட்டிற்குள் வந்து விட்டால் மகாலட்சுமி வெளியேற வழி ஏது? நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -