பணத்துடன் இந்த குச்சியை வைத்து பாருங்கள், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கட்டுக்கடங்காமல் சேரும்!

lakshmi-kuchi
- Advertisement -

பணம் நம்மிடம் சேர்வதற்கு முதலில் மகாலட்சுமியின் அருள் நமக்கு தேவை. இவர்களின் அருள் இருந்தால் தான், குப்பையில் இருப்பவரும் கோடீஸ்வரன் ஆகிறான், கோபுரத்தில் இருப்பவனும் குப்பைக்கு வருகிறான். பணத்துடன் சேர்த்து இந்த குச்சியை வைக்கும் பொழுது, பணம் பல மடங்கு பெருங்குமாம்! நம்முடைய வருமானம் அதிகரிக்க, மகாலட்சுமியின் அருள் கிடைக்குமாம். அப்படி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பது போன்ற ஆன்மிகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு மரத்தின் வேர்களிலும், குச்சியிலும் நிறையவே நற்குணங்கள் உண்டு. அதிலும் மரத்தில் தெய்வங்களின் வாசமும் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் நெல்லி மரத்தில் மகாலட்சுமியும், மல்லிகை மரத்தில் குபேர வாசமும், புளிய மரத்தில் துர் தேவதைகளை விரட்டியடிக்க கூடிய சக்தியும் உண்டு என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நாம் பணம் வைக்கும் இடங்களில் எல்லாம் இந்த ஒரு பொருளை இப்படி வைக்கும் பொழுது, பணம் அந்த இடத்தில் வீண் விரயமாகாமல் சேர ஆரம்பிக்குமாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இரட்டிப்பாக, பணமானது வீண் விரயமாக கூடாது. சுபவிரயமாக இருப்பது தான் நல்லது. அப்படி சுப விரயங்கள் அதிகரிக்க இந்த குச்சியை இப்படி வையுங்கள்.

முதலில் மூன்று குச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லி மரக்குச்சி ஒன்று, மல்லிகை செடியின் குச்சி ஒன்று, புளிய மர குச்சி ஒன்று இந்த மூன்றின் குச்சிகளையும் ஒன்றாக சேர்த்து மஞ்சள் நூலால் கட்டிக் கொள்ளுங்கள். இதை அப்படியே நீங்கள் எங்கு பணம் வைத்தீர்களோ, அங்கு வைத்து விடுங்கள். அவ்வளவுதான், இதற்கு தினமும் நீங்கள் மஞ்சள், குங்குமம் வைத்து தூபம் காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து செய்து வர வருமான தடை, தொழில் நஷ்டம், வியாபார விருத்தி இன்மை போன்றவை எதுவாக இருந்தாலும் நீங்கள் அதிலிருந்து எளிதாக மீண்டு வந்து நன்றாக சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள். உத்தியோகத்திலும் வருமானம் அதிகரிக்கும். இதனால் பொருளாதார உயரும். செல்வமும் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டே செல்லும். மகாலட்சுமியின் கடாக்ஷம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யக் கூடிய ஆற்றல் இந்த குச்சிகளுக்கு உண்டு.

தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் காசு போடும் கல்லாப் பெட்டிகளில் இது போல குச்சிகளை அடுக்கி வையுங்கள். காசு அந்த இடத்தில் புழங்கிக் கொண்டே இருக்கும். தடை இல்லாத பண வளமும் உண்டாக இந்த குச்சிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, தினமும் சாம்பிராணி தூபம் போட்டு காண்பியுங்கள். மேலும் மகாலட்சுமி படத்தை வைத்து நெய் விளக்கு ஏற்றி, பூஜை செய்து வாருங்கள். கற்கண்டை நைவேத்தியம் படையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
நல்ல நிலையில் இருந்து திடீரென சறுக்கலை சந்திக்கிறீர்களா? நீங்கள் தெரியாமல் செய்த இந்த ஒரு பாவம் கூட அதற்க்கு காரணமாக இருக்கும். இதை செய்தால் போதும் அந்த பாவம் விலகி மீண்டும் நல்ல நிலை ஏற்படும்.

வியாழன் கிழமைகளில் சிறிதளவு குங்குமத்தை கடையில் காசு கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் சன்னதிக்கு சென்று அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுத்து விடுங்கள். தானமாக மகாலட்சுமிக்கு குங்குமம் கொடுத்து வருவதால் பொருளாதாரம் ஆனது படிப்படியாக உயர தொடங்கும். நலிந்தவர்கள் கூட மென்மேலும் வளர துவங்குவார்கள். எவ்வளவு கஷ்ட கிரகங்கள் உங்களை சூழ்ந்திருந்தாலும், மகாலட்சுமி அருள் இருந்தால் அவை தடுப்பொடி ஆகிவிடும். இந்த எளிய பரிகாரங்களை செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -