நீங்கள் இப்படி இருந்தால் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே போவதை எவராலும் தடுக்க முடியாது!

- Advertisement -

ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவை பணத்தேவை தான். பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் நாம் வாங்கி விடலாம். பணம் இருப்பவர்களை தான் பெரும்பாலும் மதித்து மற்றவர்கள் நடந்து கொள்கிறார்கள். தாயாய் பிள்ளையாய் இருந்தாலும் கூட பணம் இல்லை என்றால் அங்கு மன விரிசல் ஏற்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இத்தகைய பணத்தை சேர்த்துக் கொண்டே போவதற்கான எளிய வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

sunrise

முதலில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களையும், உங்களை ஆட்கொண்ட தோஷங்களையும் நீக்கும் ஒரு அற்புத எளிய வழியாகும். 4.30 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்தை பிரம்மமுகூர்த்தம் என கூறப்படுகிறது. நாலரை மணிக்கு எழ முடியாவிட்டாலும், ஆறு மணிக்கு எழுந்து விடுவது மிகவும் நல்ல பழக்கம் ஆகும். 5.50 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து முதல் வேலையாக உங்கள் உள்ளங்கையை பாருங்கள்.

- Advertisement -

நமது உள்ளங்கையை பார்த்து விழித்தால் அன்று அதிர்ஷ்ட மழை பொழியும் என்பது ஜோதிட உண்மை. பின்னர் தரையில் இறங்கிய பின்பு உங்கள் வலது கை மோதிர விரல் தரையில் படும்படி இரு கைகளையும் வைத்து பூமா தேவியை வணங்க வேண்டும். இந்த பூமாதேவி தான் அனைத்து பாரங்களையும் தாங்கிக் கொண்டு நிற்கிறாள். அவர்களுக்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு உங்கள் வேலைகளை ஆரம்பித்தால் அமோகமான வெற்றி வாய்ப்புகள் உண்டாகும் என்பது நம்பிக்கை.

bathing

அதே போல குளிக்கும் பொழுது கங்கா தேவியை மனதில் நினைத்து குளிக்க வேண்டும். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் மஞ்சள் கலந்து குளிக்கலாம். கூடுதலாக வேப்பிலைகளை சேர்த்து குளிக்கலாம். இப்படி குளிப்பதன் மூலம் சாதாரண தண்ணீரும் கங்கை நீராக மாறுவதாக ஐதீகம் உண்டு. பூமாதேவிக்கு அடுத்ததாக கங்கையை நாம் போற்றி வணங்குவதன் மூலம் எல்லா விதமான நன்மைகளும் நமக்கு ஏற்படும் என்பது ஐதீகம். பின்னர் மகாலட்சுமி தாயாராய் பூஜை அறையில் பூஜித்து நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வத்தை போல் எந்த ஒரு தெய்வமும் நம்மைப் போற்றி பாதுகாக்க முடியாது. குலதெய்வ அருள் இருந்தாலொழிய எதையும் பெரிதாக நம்மால் சாதிக்க இயலாது. அத்தகைய குலதெய்வத்திற்கு கட்டாயம் தினமும் காணிக்கை செலுத்துவதன் மூலம் நம் செல்வ வளத்தை மென்மேலும் பெருக்கிக் கொள்ள முடியும் என்பது சூட்சமமான உண்மை. ஒரு சிலர் திருப்பதிக்கு செல்வதற்கு மண் உண்டியல் வைத்திருப்பார்கள். அதே போல அவரவர் குல தெய்வத்திற்கு ஒரு மண் உண்டியலை வாங்கி வைக்க வேண்டும்.

pot-undiyal

அந்த உண்டியலில் தினமும் குறைந்தது ஒரு ரூபாயாவது போட்டுக் கொண்டே வர வேண்டும். உங்களால் முடிந்தவரை எவ்வளவு போட முடியுமா! அவ்வளவு போடலாம். உண்டியல் நிறையும் முன்னர் எந்த காரணம் கொண்டும் அதிலிருந்து காணிக்கை பணத்தை எடுக்கக்கூடாது. நிறைந்த பிறகு அந்த பணத்தை வைத்து குலதெய்வ கோவிலுக்கு யாத்திரை செல்லலாம். அல்லது கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தலாம். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை தடைகளும் நீங்கி பணமானது உங்களிடம் சேர்ந்து கொண்டே இருப்பதை எவராலும் தடுத்துவிட முடியாது. நீங்களும் இதனை முயற்சி செய்து பயனடையலாமே! குல தெய்வம் யாரென்று தெரியாதவர்களுக்கு காஞ்சி காமாட்சி அம்மன், திருசெந்தூர் முருகப் பெருமான் குல தெய்வமாக இருந்து பாதுகாப்பார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

- Advertisement -