இன்று வெள்ளிகிழமையோடு வந்து இருக்கும் புத்தாண்டில் ஒரே ஒரு வெற்றிலையும்,ஒரு ரூபாயும் வைத்து இதை செய்தால், இந்த வருடம் முழுவதும் உங்கள் வருமானம் பல மடங்கு உயர்ந்து பண மழையில் நனைவது உறுதி.

- Advertisement -

ஒவ்வொரு வருடம் தொடங்கும் போதும் அந்த நாளில் நாம் ஆலயம் செல்வதும், இறைவனை வழிபடுவதும், நல்ல காரியங்களை செய்வதும் எல்லாமே அந்த வருடம் முழுவதும் நமக்கு நல்லதே நடந்து நம் வாழ்வில் நல்லபடியாக உயர வேண்டும் என்பதற்காக தான். அந்த வகையில் இன்று சித்திரை தமிழ் வருடப்பிறப்பில் செய்யும் இந்த ஒரு பரிகாரமானது இந்த வருடம் முழுவதும் உங்களுக்கான பண வரவு அதிகரித்து நல்ல செல்வ செழிப்புடம் வாழ வழிவகுக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவு அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பண வரவை அதிகரிக்கச் செய்யும் வெற்றிலை ஒரு ரூபாய் பரிகாரம்:
இந்த பரிகாரத்தை இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்குள் செய்து விடுங்கள். அல்லது இன்று மாலை 6 மணிக்கு மேல் செய்யலாம். இதை கோவிலில் தான் செய்ய வேண்டும். மாலையில் செய்பவர்கள் மறுபடியும் ஒரு முறை குளித்து விட்டு ஆலயம் செல்லுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு நல்ல வெற்றிலையாக ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அடுத்து ஒரு கோமதி சக்கரம், உடைக்காத முழு பாக்கு, ஒரு ரூபாய் நாணயம், பச்சரிசி ஒரு கைப்பிடி, தேங்காய், பழம், ஊதுபத்தி, பூ ஏதேனும் ஒரு இனிப்பு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய இவை அனைத்தையும் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை நீங்கள் முன்னமே வீட்டில் வாங்கி வைத்து செல்லும் போதும் எடுத்து செல்லலாம் தவறில்லை.

இப்போது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பரிகாரத்தை துர்க்கை அம்மன் பாதத்தில் வைத்து தான் செய்ய வேண்டும். முதலில் வெற்றிலையில் காம்பை நீக்கி விட்டு குங்குமத்தை நன்றாக குழைத்து அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளுங்கள். ஸ்வஸ்திக் வரைந்த வெற்றிலையில் பச்சரிசி, கோமதி சக்கரம், ஒரு ரூபாய் நாணயம், பாக்கு இவற்றை எல்லாம் வைத்து விடுங்கள் அதன் பிறகு தேங்காய், பூ, பழம், இனிப்பு அனைத்தையும் வைத்த பிறகு ஊதுபத்தி ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இவை அனைத்தையும் அம்பிகையின் பாதத்தில் வைத்து வணங்கி பிறக்கிற இந்த புத்தாண்டு எங்களுக்கு இனிய புத்தாண்டாக மலர வேண்டும் வருமான உயர்ந்து, பணவரவு தாராளமாக கிடைத்து நாங்கள் கடன் இல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழ வழி செய்யுங்கள் என்று துர்க்கை அம்மனை மனதார வேண்டிக் கொண்டு, நீங்கள் எடுத்துச் சென்றதில் ஸ்வஸ்திக் வரைந்த வெற்றிலையை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் அம்பிகையின் பாதத்திலே வைத்து விட்டு வந்து விடுங்கள். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு சிகப்பு நிறப்பட்டு துணி அல்லது பட்டு கலந்தது போன்ற துணியில் நீங்கள் எடுத்து வந்த வெற்றிலையை மடித்து உங்களுடைய பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

இன்று வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். பரிகாரத்திற்கு மற்ற பொருட்களை எல்லாம் இதே போல வாங்கிக் கொள்ளுங்கள். வெற்றிலை மட்டும் இரண்டாவது வாரம் இரண்டு வெற்றிலை, மூன்றாவது வாரம் மூன்று வெற்றிலை இப்படி ஒவ்வொரு வாரமும் வெற்றிலை மட்டும் கொண்டு வந்து அந்த சிகப்பு நிற துணியில் வைத்து அதை மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய தொடங்கிய உடனே உங்களுக்கு இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பணம் பல வழியில் வருவதற்கான வாய்ப்புகள் பெருகும். மூன்று வாரங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து முடிக்கும் பொழுது உங்களுக்கு இருக்கும் பணத்தட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்குவதற்கான வாய்ப்புகள் வரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பீரோவில் பணம் வைப்பவர்கள் இப்படி வைத்தால் உங்களிடம் கண்டிப்பாக பணம் சேரவே சேராது! பீரோவில் பணத்தை வைக்கும் முறை என்ன?

இதில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் துர்க்கை அம்மன் அருள் ஆசியோடும், மகாலட்சுமியின் அனுகிரகத்தோடும் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று உயர வேண்டி கொண்டு பரிகாரத்

- Advertisement -