பணம் சேர பௌர்ணமி பரிகாரம்

mahalakshmi coin pornami
- Advertisement -

நம்முடைய ஒவ்வொரு நாளின் முயற்சியும் உழைப்பும் பணத்தை சம்பாதிக்கவும் அதை சேர்ப்பதற்காகவும் தான். நம்முடைய உழைப்பையும் முயற்சியும் போட தயாராக இருந்தாலும் அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்த அனைவருமே பணத்தை சேர்த்து விடுவதுமில்லை. அப்படியானால் யாரிடமும் பணம் சேர்வது இல்லையா என்ற கேள்வி எழலாம்.

இந்த பணம் நம்மை வந்து சேர்வதற்கும் யோகம் இருக்க வேண்டும். இத்துடன் பணத்தை ஈர்க்கும் தன்மையும் நம்மிடம் இருக்க வேண்டும். அத்தகைய தன்மையை ஏற்படுத்தி பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்பையும் பணம் கையில் தங்கக் கூடிய அனுகிரகத்தையும் தரக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணம் சேர பரிகாரம்

இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று தான் செய்ய வேண்டும். அதாவது நாளை ஞாயிறு (26.11.23) இரவு 7 மணிக்கு மேல் செய்ய வேண்டும். பொதுவாகவே பௌர்ணமி அன்று அதிகப்படியான நேர்மறை ஆற்றல் பூமிக்கு கிடைக்கும். அந்த நேரத்தில் நாம் செய்யக் கூடிய எந்த பரிகாரமும் அதிக பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டும் இன்றி பௌர்ணமி தினமானது மகாலட்சுமி தாயாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பணவரவு என்றாலே மகாலட்சுமி தாயார் தான். ஆகையால் இன்றைய தினத்தில் செய்யப்படும் இந்த பரிகாரம் அதிக பலனை தரும்.

இப்போது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பரிகாரத்தை பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்திருந்து செய்ய தொடங்குங்கள். முதலில் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். இத்துடன் 2 லவங்கம், 2 ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, சிறிதளவு பச்சரிசி, பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து வெள்ளை நிற நூலால் முடிச்சு போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை உங்கள் வலது கையில் வைத்து ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் முன் அமர்ந்து உங்கள் இஷ்ட தெய்வம், குலதெய்வம், மகாலட்சுமி தாயார் அனைவரையும் மனதார வேண்டி கொள்ளுங்கள். இந்த முடிச்சு வைக்கும் இடத்தில் பணம் வரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை கையில் எடுத்துக் கொண்டு நிலவின் ஒளி படும் இடத்திற்கு செல்லுங்கள்.

அந்த இடத்தில் ஒரு பத்து நிமிடம் நீங்கள் நிற்க வேண்டும் அல்லது அமர்ந்து கொள்ளலாம். அப்போதும் இந்த முடிச்சை வலது கையில் வைத்து நிலவை பார்த்து காட்டியவாறு கைகளை உயர்த்தி வைத்துக் கொண்டு இந்த முடிச்சு வைக்கும் இடத்தில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எங்கே வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது அங்கே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதில் சேர்ந்திருக்கும் பொருட்கள் அனைத்துமே மகாலட்சுமி தாயாருக்கு உகந்ததாகவும் பண இயற்றி அதிகரிக்க கூடியதாகவும் உள்ளவை தான். அது மட்டும் இன்றி பௌர்ணமி நிலவொளியில் செய்யப்படும் இந்த பிரார்த்தனை நல்ல ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இதன் மூலம் உங்கள் வேண்டுதல் பல மடங்கு பலனை அளிப்பதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட தீபம்

பொதுவாகவே பௌர்ணமியில் செய்யப்படும் பரிகாரம் பலனளிப்பதாக இருக்கும். கார்த்திகை தினத்தோடு வந்திருக்கும் இந்த பௌர்ணமி விசேஷமான பலன்களை தரக்கூடியது. பணவரவிற்காக செய்யப்படும் இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையோடு செய்து நல்ல பலனை அடையலாம்.

- Advertisement -