பண வசியம் ஏற்பட தீபம்

cash dheepam
- Advertisement -

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியில் தெய்வத்தை காணலாம். நாம் தீபம் ஏற்றுவதற்கான காரணமும் இது தான். நம்முடைய இந்து சாஸ்திரத்தில் தீபத்தின் ஒளியில் தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம். ஆகையால் தான் நம்முடைய வழிபாடுகளில் எப்பொழுதுமே தீபமானது முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்தகைய தீபத்திற்கே திருநாளான இந்த கார்த்திகை தீப திருநாளில் நாம் ஏற்றும் தீபத்திற்கு அடியில் இந்த ஒரு பொருளை வைக்கும் பொழுது நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வசியம் ஏற்பட கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்தில் விளக்கு ஏற்றுவதற்குகென தனியாக ஒரு முறையே உள்ளது. நீங்கள் ஏற்றும் விளக்குகள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அவை ஒற்றைப்படையில் இருக்கும்படி ஏற்றுங்கள். விளக்குகளின் எண்ணிக்கை ஏற ஏற அதற்கான பலன்களும் உங்களுக்கு பெருகிக் கொண்டே செல்லும்.

அதே போல் அகல் விளக்கு எத்தனை ஏற்றினாலும் ஒரு குத்துவிளக்கை அன்றைய தினம் ஏற்றுங்கள். அந்த குத்து விளக்கில் ஐந்து முகத்திலும் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இது வீட்டிற்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரத்தை பெற்று தரக்கூடியதாக இருக்கும். இத்துடன் நீங்கள் ஏற்றும் அகல் விளக்கு எத்தனையாக இருப்பினும் மூன்று அகல் விளக்கின் அடியில் உப்பு வைத்து ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதற்கு ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கல் உப்பை பரப்பி வைத்து விடுங்கள். அதன் மேல் ஒரு அகல் வைத்து அந்த அகலின் மேல் இன்னொரு அகலை வைத்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். உப்பிற்கு மேல் நேரடியாக அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றக் கூடாது உப்பிருக்கும் நீங்கள் ஏற்றும் அகல் தீபத்திற்கும் இடையில் ஒரு அகல் இருக்க வேண்டும். இது உப்பு தீபம் ஏற்றும் முறை தான்.

இந்த தீபத்தை மூன்று இடத்தில் ஏற்ற வேண்டும். ஒன்று உங்களுடைய பூஜை அறையில் ஏற்றுங்கள், மற்றொன்று சமையலறையில் இன்னும் ஒரு விளக்கு நிலை வாசல். இந்த மூன்று இடத்தில் ஏற்றக் கூடிய இந்த உப்பு தீபமானது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் செல்வ செழிப்பையும் ஏற்படுத்தக் கூடியதாய் அமையும். அது மட்டும் இன்றி பணவரவை தாராளமாக்கி பணம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு பெருகிக் கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலக

நம் வீட்டில் செய்யக் கூடிய ஒவ்வொரு வழிப்பாடும் பூஜையும் நம்முடைய வாழ்க்கை வளமானதாக மாற்றிக் கொள்ளத்தான். அப்படி ஏற்றக் கூடிய தீபத்தில் இந்த ஒரு சிறிய மாற்றத்தை செய்யும் போது செல்வ வளம் மேலும் பெருகும் எனில் அதை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. இந்த தீப முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் ஏற்றி பலனடையலாம்.

- Advertisement -