கைக்கு வரக்கூடிய வருமானம் சிதறாமல் சேமிப்பில் தங்க வேண்டுமா? சிவப்பு துணியில் இதை மட்டும் முடிந்து வையுங்கள். சேமிப்பு பல மடங்கு பெருகும்.

cash-deepam-vilakku
- Advertisement -

நிறைய பேருக்கு வருமானம் கிடைப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பணம் அது பாட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். ஆனால் வந்த பணம் போற வழியும் தெரியாது. செலவு செலவு செலவு. எதற்காகத்தான் பணம் செலவாகிறது என்றே தெரியாமல் பணத்தை செலவு செய்து கொண்டிருப்போம். வீண் விரயங்கள் ஆகும். ஒரு ரூபாய் கூட கையில் தங்கிய பாடாக இருக்காது. பணத்தை சேமித்து, ஒரு சொத்து பத்தை வாங்கக்கூடிய சூழ்நிலை இருக்காது. வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டால் அது வேறு. வருமானம் வந்து அந்த காசு பிரயோஜனப்படவில்லை என்றால் அதில் வரக்கூடிய வருத்தம் ரொம்பவும் பெரியதாக இருக்கும் அல்லவா. வரக்கூடிய காசை வீண் விரயம் ஆக்காமல் சேமிப்பில் வைத்து உபயோகமானதாக பயன்படுத்திக் கொள்ள நாம் செய்ய வேண்டிய ஒரு சின்ன தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு சிவப்பு பட்டு துணி தேவைப்படும். அசல் பட்டு துணியாக வாங்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பரிகாரம் உடனடியாக பலனை கொடுக்கும். கைகுட்டை அளவில் துணி இருந்தால் கூட போதும். அந்த துணியில் 4 பக்கங்களிலும் மஞ்சள் தடவி, நடுவே அரகஜாவில் ஒரு பொட்டை வைத்துக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் இந்த துணியில் ஒரு ரூபாய் நாணயம், மருதாணி விதை, கிராம்பு, ஏலக்காய், இந்த பொருட்களை வைத்து சிறிய முடிச்சாக கட்டி இதை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பரிகாரத்தை செய்யும் போதும் மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த துணியில் இருக்கக்கூடிய பொருட்களின் வாசம் குறைந்து போகும். உள்ளே இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு துணியை ஒரு முறை துவைத்து விட்டு மீண்டும் புதியதாக இந்த முடிச்சை கட்ட வேண்டும்.

அப்போது மீண்டும் புதியதாக அரகஜாவை துணியில் மறக்காமல் வையுங்கள் நான்கு மூலைகளிலும் மஞ்சளும் தடவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அரகஜா நேர்மறை ஆற்றலை வசியம் செய்யக்கூடிய தன்மை கொண்டது. கிராம்பு ஏலக்காயும் பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருட்கள். பணத்தை தக்க வைத்துக் கொள்ள சிவப்பு நிற பட்டு துணி மிகவும் உகந்தது. தாந்திரீக ரீதியாக நம்பிக்கையோடு இந்த சிறு பரிகாரத்தை செய்தாலும் வீண் செலவு குறையும். வீண்விரையும் குறையும். பணம் சேமிப்பில் தங்கும்.

- Advertisement -

வருமானமே இல்லாதவர்கள் இந்த முடிச்சை தயார் செய்து பீரோவில் வைத்தால் வருமானம் பெருகும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இறுதியாக இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும். அனாவசியமாக நம் கைக்கு வரக்கூடிய பணம் வீண்விரயம் ஆகிறது. மருத்துவ செலவுக்கே செலவாகிறது என்றால் இதில் நம் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கர்மாவும் மறைந்திருக்கிறது. அந்த கர்மாவை போக்க என்ன செய்வது.

உங்களுக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து தானம் செய்யுங்கள். அதாவது இயலாதவர்களுக்கு ஊனமுற்றவர்களுக்கு முதியவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவியை உங்கள் வருமானத்திலிருந்து செய்தால் கூட உங்கள் கர்மாவால் ஏற்படும் வீண் விரயங்கள் குறைந்து நல்லது நடக்கும். மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக பணம் உங்கள் கையில் நிரந்தரமாக தங்கும். பல தலைமுறைகளுக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க இந்த சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும்.

- Advertisement -