பர்ஸில் பணம் இல்லாமல் காலியாக இருக்கிறதே என்று புலம்புவோர் ஸ்வஸ்திக் சின்னத்தை இதில் வரைந்து பர்ஸில் வைத்து பாருங்கள். பணம் இல்லை என்ற வார்த்தை கூட உங்களிடமிருந்து வரவே வராது.

wallet money
- Advertisement -

இப்போதெல்லாம் ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர் என அனைவரும் மணி பர்ஸ் அல்லது கைப்பை போன்றவற்றை பயன்படுத்தும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அந்த மணி பர்சை வாங்கும் பொழுது கூட ஒரு சில நேரம் காலம் பார்த்து அதன் நிறம் போன்றவற்றை சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி செய்யும் போது அந்த மணி பர்ஸில் எப்போதும் பணம் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அப்படி வாங்கும் மணி பர்ஸில் இந்த ஒரு பரிகாரத்தை செய்த பிறகு பணத்தை எப்போதும் நமக்கு ஈர்த்து தந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பர்ஸில் பணம் எப்போதும் தாராளமாக இருக்க
இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தும் முக்கியமான ஒன்று அரச இலை. அரச இலையை நாம் சனிக்கிழமைகளில் மட்டும் தான் எடுக்க வேண்டும் மற்ற நாளில் எடுக்கக் கூடாது. அதையும் ஆறு மணிக்கு முன்பாகவே எடுத்து இதை செய்து விட வேண்டும். அதன் பிறகு அரச இலையை எடுத்து இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது.

- Advertisement -

அரசமரத்தில் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. சனிக்கிழமைகளில் பெருமாளும் சேர்ந்து இதில் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அத்தகையவிசேஷமான நாளில் அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது பலன் அதிகரிக்கும். இப்போது சனிக்கிழமை காலையில் குளித்து முடித்த பிறகு ஒரே ஒரு அரச இலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இலையின் பூச்சி அழித்து ஓட்டை என எதுவும் இல்லாமல் நல்ல இணையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு சுத்தமான மஞ்சள் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டிலேயே அரைத்த மஞ்சள் என்றால் இன்னும் சிறப்பு. இந்த மஞ்சளில் கொஞ்சமாக தயிர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு குழைத்த பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் அரச இலையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். ஸ்வஸ்திக் சின்னத்தில் வரைந்த இந்த அரச இலையை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி பண வரவு தாராளமாக இருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்ட பிறகு சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இந்த இலையில் நாம் எழுதியது நன்றாக காய்ந்த பிறகு இதை எடுத்து உங்கள் மணி பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாற்றிக் கொண்டே இருங்கள். ஆண்கள் இந்த பர்சை பயன்படுத்தும் பொழுது இடுப்பிற்கு கீழே வைக்கக் கூடாது என்றும் பெண்கள் மாதவிலக்கின் போது இதை தொடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்வஸ்திக் சின்னம் என்றாலே அது லாபம், பணத்தை தான் குறிக்கும் அத்துடன் தயிர் மஞ்சள் இலை போன்ற மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பெருமானின் ஆசிர்வாதத்துடன் இந்த பரிகாரத்தை செய்தும் போது உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: உங்க பீரோவில் இதெல்லாம் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்காது தெரியுமா? பீரோவில் வைக்கவே கூடாத பொருட்கள்!

இந்த இலையை நீங்கள் பரிசல் மட்டும் தான் வைக்க என்று இல்லை. நீங்கள் பணம் வைக்கும் இடம் தொழில் செய்யும் இடம் எல்லாவற்றிலும்வைத்துக் கொள்ளலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -