மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்த இந்த மலரை கொண்டு வந்து இப்படி செய்த பின் பணப்பெட்டியில் வைத்தால் தாயாரே உடன் வந்தமர்ந்து வீட்டில் பணமழையை நிச்சயம் பொழிவார்.

mahalakshmi Cash
- Advertisement -

ஒரு வீட்டில் பணமானது தங்கு தடை இன்றி வந்து பணம் தாராளமாக குவிந்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுமையாக இருக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாகத் தான் வீட்டில் நாம் பூஜை செய்வதும் விளக்கேற்றுவதும், வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க செய்வது போன்றவை எல்லாம் காலம் காலமாக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம். இவற்றுடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்யும் பொழுது வீட்டில் பண வரவிற்கு தடையே இருக்காது என்று சொல்லப்படுகிறது அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க:
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க நாம் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயார் பூஜை செய்வதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் தாயாருக்கு குங்கும அர்ச்சனை மலரட்சனை போன்றவற்றை செய்து வழிபடும் பொழுது அவற்றிற்கான பலனே தனி தான். இது மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாரின் கனகதாரா ஸ்தோத்திரம் வீட்டில் அடிக்கடி போடுவதும், ஒரு வேளை உங்களுக்கு இது தெரிந்தால் அதை படிப்பதும் வறுமை நீங்கி செல்வம் சேர ஒரு எளிய வழியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு பெருமாள் ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி தாயார் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க செல்லும் பொழுது நாம் தாமரை மலரை கொண்டு செல்ல வேண்டும். அந்த மலரை கொண்டு தாயாரை அபிஷேகம் செய்ய வேண்டும் அந்த நேரத்தில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்து முடித்த பிறகு தாயாரின் பாதத்தில் இருந்து ஒரே ஒரு தாமரை மலரை நீங்கள் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும். அந்த தாமரை மலரை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இப்போது ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துணியில் தாயாரின் பாதத்தில் வைத்து கொண்டு வந்த தாமரை மலரை வைத்து சிறு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக இந்த தாமரை மலரை வைத்து தீபம் ஏற்றி உங்கள் வீட்டில் பண பற்றாக்குறை என்பது வரவே கூடாது என்பதை மனதார வேண்டிக் கொண்டு வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்

- Advertisement -

இந்த மூட்டையை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதை குறிப்பாக பீரோவில் வைப்பது மிகவும் சிறந்தது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் தொழிற் ஸ்தானத்தில் கல்லாப்பெட்டியில் அல்லது பணம் புழங்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இதை வாரம் ஒரு முறை மாற்றுவது மிகவும் நல்லது வாரம் ஒரு முறை இதே போல் ஆலயத்திற்கு சென்று பூஜை செய்த மலரை மாற்றிக் கொள்ளுங்கள். பண வரவு தடையின்றி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: சுக்கிர தோஷம் விலக, பணக்கஷ்டம் தீர, செய்ய வேண்டிய தண்ணீர் பரிகாரம். 1 டம்ளர் தண்ணீரால் உங்கள் தலையெழுத்தையே மாற்றலாம்.

மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதே இந்த தாமரை மலரில் தான். ஆகையால் இந்த மலரை அவருக்கு அர்ச்சனை செய்து அதை நாம் கொண்டு வந்து வைக்கும் போது இந்த மலருடனே அவரும் வந்த அமர்ந்து நம்முடைய துன்பத்தை நீக்கி பணவரவை அதிகரித்து நம்மை செல்வ செழிப்புடன் வாழ வைப்பார் என்பது தான் இந்த பரிகாரத்தின் பொருள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து தாராளமான பண வரத்தை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -