பணம் சேர கற்பூர பரிகாரம்

kirambhu karpooram cash
- Advertisement -

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழி ஏற்ப இன்று பணம் இல்லாமல் வாழும் மனிதன் நடைப்பினமான மனிதன் போல தான் கருதப்படுகிறான். பணம் இல்லாமல் வாழவே முடியாதா? என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுக்குத் தான் சரியாக வரும். பணம் இல்லை என்றால் நிச்சயமாக இந்த காலக்கட்டத்தில் வாழ்வது சிரமம் தான்.

சரி அந்த பணத்தை சம்பாதிக்க வேலைக்கு செல்கிறோம் காலை முதல் மாலை வரை உழைக்கிறோம். அப்படியிருந்தும் நம் நினைக்கும் பணத்தை சம்பாதித்து விடுகிறோமா அதுவும் சந்தேகம்தான் அப்படி சம்பாதித்த பணமும் கையில் தங்குகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறி தான். அப்படியானால் இந்த பணத்தை பெருக்கவும் கையில் தங்கும் என்ன செய்வது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் விழும்

- Advertisement -

இந்தக் கேள்விக்கான ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சில பரிகார முறைகளை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த எளிமையான பரிகாரங்களை நாம் தினமும் கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய பண பிரச்சனைகள் நீங்கி வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும் அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க

பண வரவு அதிகரிக்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் வெள்ளி அல்லது செம்பிலான சிறிய தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த உலோகங்களையும் இதற்கு பயன்படுத்தக் கூடாது. இந்த தட்டில் ஒரே ஒரு கிராம்பு உடையாத நல்ல கிராம்பாக இருக்க வேண்டும். ஒரு கற்பூரம். இதற்கு எந்த கற்பூரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இவை இரண்டையும் அந்த தட்டில் போட்டு மாலை 6 மணிக்கு வீட்டில் தீபம் ஏற்றிய பிறகு இந்த கிராம்பையும், கற்பூரத்தையும் எரித்து அதன் புகையை வீடு முழுவதும் படும்படி காட்டுங்கள். இது வீட்டிற்கு நல்ல பணவரவை இழுத்து தரக்கூடிய அற்புதமான பரிகாரம். அடுத்து கடைகளில் கற்பூர எண்ணெய் விற்பனையில் உள்ளது அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் குளிக்கும் தண்ணீரில் ஒன்று அல்லது மூன்று சொட்டு கற்பூர எண்ணெய் விட்டு அந்த தண்ணீரில் தினமும் குளித்து வாருங்கள். இது நம்முடைய எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை உருவாக்கி பண ஈர்ப்பு தன்மையை நமக்கு அதிகரித்துக் கொடுக்கும்.

- Advertisement -

கற்பூரம் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த பொருளாக கருதப்படுகிறது அதைப் போல் கிராம்பு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பெற்ற பொருள். இது இரண்டையும் தினந்தோறும் பயன்படுத்தும் போது வீட்டில் பண வரவு அதிகரித்து கையில் தாராளமான பணப்புழக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் உயர நரசிம்மர் மந்திரம்

மகாலட்சுமி தாயார் மனதார நினைத்து இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய பணப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பணவரவிற்கான வாய்ப்புகள் உங்களை கட்டாயமாக தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -