வாழ்க்கையில் உயர நரசிம்மர் மந்திரம்

narachimart manthiram
- Advertisement -

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைவர் முன்னிலையிலும் கவுரவமாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள் அதற்கான முயற்சி போராட்டம் தான் தினம் தினம் நாம் செய்யக் கூடிய வேலைகள் எல்லாம். என்ன தான் இத்தகைய முயற்சிகள் செய்தாலும் எல்லோராலும் இப்படியான வாழ்க்கையை வாழ முடிவதில்லை.

இது போன்ற வாழ்க்கையை வர நமக்கு தெய்வங்களின் அனுகிரகம் முக்கியமாக தேவை. அதற்காக நம்முடைய முயற்சிகளுடன் சேர்த்து தெய்வத்தை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வாழ்க்கையில் உயர லட்சுமி நரசிம்மர் மந்திரம்

தெய்வங்களின் முழு கடாட்சத்தையும் பெற்று குடும்பம் செழிப்புடன் வாழ வேண்டுமெனில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த பிரம்ம முகூர்த்த தீபத்தியே அனைவராலும் ஏற்ற முடியாது. சிலர் எத்தனை முயற்சி செய்தாலும் அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றுவதற்கான வாய்ப்பே அவர்களுக்கு கிடைக்காது.

இதற்கு காரணம் காலையில் எழுந்து தீபம் ஏற்றி தெய்வத்தை வணங்குவதற்கே பிரம்ம முகூர்த்த நேரத்தின் தெய்வமான பிரம்மாவின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது அத்தனை எளிதில் அனைவருக்கும் கிடைத்து விடாது. இந்த ஒரு மந்திர வழிபாட்டை செய்யும் போதும் பிரம்மாவின் பரிபூரண அருளுடன் சேர்த்து நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்வதற்கான வாய்ப்பு பெருகும்.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு குறைந்தது 7 நாட்கள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்திருக்க முடியவில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் 21 நாட்கள் மட்டும் தொடர்ந்து இந்த தீப வழிபாட்டுடன் மந்திரத்தையும் சொல்லும் பொழுது நாம் தொடர்ந்து காலையில் பிரம்ம முகூர்த்த வழிபாடு செய்யவும் நம்முடைய வாழ்க்கை தரும் உயரவும் இது துணை புரியும்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு 7 முறை சொல்ல வேண்டும். இப்படியாக 21 நாட்கள் இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும். பெண்கள் அவர்களுக்கான மாதவிலக்கு காலம் முடிந்த பிறகு இதை துவங்குவது நல்லது. ஒரு வேலை இடையில் இது போல நடந்தால் வீட்டில் இருக்கும் ஆண்களும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை சனிக்கிழமையில் துவங்கலாம் அல்லது ஏகாதிசி திதியில் துவங்குங்கள் இரண்டுமே அற்புதமான பலனை பெற்றுத் தரும். இந்த மந்திரத்தை நீங்கள் ஜெபிக்க ஆரம்பித்ததும் பிரம்மாவுடைய அருளும் லட்சுமி நரசிம்மர் ஓடிய ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும், நோய் நொடிகள் நீங்கும், வருமானம் பல மடங்கு பெருகும், தெய்வ கடாக்ஷம் வீட்டில் நிறைந்திருக்கும் சமூகத்தில் நல்ல பெயர் புகழ் அந்தஸ்துடன் வாழக்கூடிய யோகங்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகைகள் சேர பரிகாரம்

இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய இந்த எளிய மந்திர வழிபாட்டு முறையை நாமும் பின்தொடர்ந்து நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -