தினம் தினம் பண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு வரி துளசி மந்திரத்தை குளிக்கும் போது ஜெபித்து வந்தாலே போதும். பணம் இல்லை என்ற வார்த்தை கூட உங்கள் வாயிலிருந்து வரவே வராது.

tulasi cash bath
- Advertisement -

இன்றைய குடும்பங்களில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக விளங்குவது இந்த பணம் தான். பணம் இருந்தால் மட்டும் போதுமா என்று நாம் கேட்டு விடலாம். ஆனால் பணம் இல்லாமலும் எதுவும் செய்ய முடியாது என்ற இந்த நிதர்சனமான உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். பணம் என்ற ஒன்று இல்லாமல் வீட்டில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஏன் மற்றவர்கள் முன் தலை நிமிர்ந்து கூட வாழ்வது இயலாத காரியம் தான்.

அத்தகைய பணத்தை ஈட்ட தான் இன்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எல்லோரிடமும் இருக்கிறதா என்றாலும் அதுவும் சந்தேகம் தான். காலை முதல் இரவு வரை என்ன தான் பாடுபட்டாலும் பணத்தட்டுப்பாடு என்ற இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பணத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கான ஒரு எளிய பரிகார வழியை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணம் கையில் தங்க சொல்ல வேண்டிய மந்திரம்
வீட்டில் எப்போதும் பணம் தங்கவும் செல்வ வளத்துடன் வாழவும் பெரும்பாலானோர் துளசி பூஜை செய்வதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த துளசியானது மகாலட்சுமி தாயார் மறு உருவமாகவே பார்க்கப்படுகிறது. அப்படியான இந்த துளசி செடிக்கு தினமும் பூஜை செய்யும் போதே நம்முடைய கர்ம வினைகள் நீங்கி வீட்டில் செல்வம் மகிழ்ச்சி அனைத்தும் நிலைக்கும் என்பது ஐதீகம். இப்போது நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கும் இந்த துளசி செடியை பயன்படுத்தி தான் இந்த பரிகாரத்தை செய்ய போகிறோம்.

இதற்கு நாம் தினமும் குளிக்க செல்வதற்கு முன்பாக ஒரு பத்து துளசி இலையை பறித்து அல்லது கடைகளில் முன்னமே வாங்கி வைத்து விடுங்கள். இதை வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் எந்த துளசி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அந்த தண்ணீரின் துளசி இலை சாறு முழுவதுமாக இறங்கி விடும். அதன் பிறகு இந்த தண்ணீரை நீங்கள் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரோடு கலந்து குளிக்க வேண்டும். அப்படி குளிக்கும் வேளையில் இந்த மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஓம் தான ப்ரதாயை நமஹ
என்று இந்த மந்திரத்தை நீங்கள் குளிக்கும் போது எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். இதை ஒரு முறை நன்றாக படித்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் குளிக்கும் பொழுது இதை நீங்கள் பார்த்து எல்லாம் படிக்க முடியாது. ஒவ்வொரு முறை நீரை எடுத்து உங்கள் மேலே ஊற்றும் போதும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரு ரூபாய் நாணயத்தை இத்துடன் சேர்த்து வரவேற்பறையில் வைத்துப் பாருங்கள் இந்த ரூபாய் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கக் கூடிய யோகத்தை உங்களுக்கு தேடி தரும்.

துளசி கலந்த தண்ணீருடன் இந்த துளசி மந்திரத்தையும் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது உங்களிடம் இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பண ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். எப்போதும் பணப்பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த ஒரு வரி துளசி மந்திரத்தை சொல்லி பண பிரச்சனையிலிருந்து முழுவதுமாக நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -