ஒரு ரூபாய் நாணயத்தை இத்துடன் சேர்த்து வரவேற்பறையில் வைத்துப் பாருங்கள் இந்த ரூபாய் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கக் கூடிய யோகத்தை உங்களுக்கு தேடி தரும்.

- Advertisement -

பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்ன ஆசைப்படுவதெல்லாம் நியாயமான ஒன்று தான். ஆனால் அதை எல்லாம் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாக விளங்குவது வேலை தான். ஒருவர் நல்ல முறையில் அயராது பாடுபட்டு உழைப்பதோடு கடவுளின் அனுகிரகம் இருந்தால் தானே பணத்தை நம்மால் சேர்க்க முடியும். அப்படியானால் அதற்கு அடிப்படையான தேவை வருமானம். அந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வர இந்த பரிகாரம் உதவியாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பணத்தை அதிக அளவில் ஈட்ட நமக்கு நல்ல வேலை நல்ல வருமானம் தேவை. இந்த வேலையோ வருமானமும் அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவது இல்லை. ஒவ்வொருவரும் இதற்காக பெரும்பாடு படுகிறார்கள். அப்படி பாடுப்படுவதோடு சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய நாள் கிழமை எதுவும் கிடையாது. இந்த பரிகாரத்திற்கு ஒரு பிளாஸ்டிக் தட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தட்டு வெள்ளை, பச்சை, சிகப்பு நிறத்தில் இருக்கலாம். ஆனால் வெள்ளை நிறம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் வெள்ளை ஆனது சுக்கிர பகவானுக்கு கூறியது. இத்துடன் 54 ஒரு ரூபாய் நாணயம் அல்லது 108 ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த தட்டில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நாணயத்தை முழுவதுமாக நிரப்பி விடுங்கள். இந்த நாணயத்தின் நடுவில் குபேர பொம்மையை வைக்க வேண்டும். அதாவது முதுகில் மூட்டையை சுமந்தது போல் இருக்கும் குபேர பொம்மையை இதன் நடுவில் வைத்து இந்த தட்டை உங்கள் வீட்டு வரவேற்ப அறையில் வைத்து விடுங்கள். இது அனைவரும் பார்க்கும் படியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஒரு ரூபாய் நாணயம், இந்த 54, 108 எண்ணிக்கை இவையெல்லாம் குபேரர் அம்சமாக பார்க்கப்படுகிறது அத்துடன் சேர்த்து இந்த குபேரர் பொம்மையும், சுக்கிர பகவானுக்குரிய நிறத்துடன் சேர்ந்து வரவேற்பு அறையில் இருக்கும் பொழுது உங்களுக்கு பணம் ஈர்ப்புத்தன்மை அதிகரிக்கும். பண ஈர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்றாலே அது வருமானத்தை பெருக்கி தருவதாக தான் இருக்கும். இதை செய்த பிறகு நீங்கள் பணம் சம்பாதிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் வெற்றி பெற்று நீங்கள் எதிர்பார்த்ததை விட வருமானம் உங்களைத் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: வரவேற்பு அறையில் இந்த 1 பொருளை வைத்து விட்டால் போதும். வயிற்றெரிச்சலோடு உங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்களுடைய கண் திருஷ்டி கூட, உங்கள் மேல் விழாது.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை நம்பிக்கையுடன் செய்து உங்களின் அயராத முயற்சியோடு கடவுளின் அனுகிரகத்தையும் பெற்று நல்ல செல்வ வளத்துடன் கோடீஸ்வரராக வாழும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -