உங்க வீட்டு சமையலறையில் இந்த பொருட்களை மட்டும் ஒளித்து வைத்தால் போதும், அப்புறம் பாருங்க உங்க வீட்டில் பண தட்டுபாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

- Advertisement -

இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அப்படியான இந்த பணத்தை தேடி நாம் ஓட வேண்டிய கட்டாயத்தில்  இன்று இருக்கிறோம். அதற்காக தான் இத்தனை ஓட்டமும், உழைப்பும். ஆனாலும் அதற்கான பலன் முழுவதுமாக கிடைக்கிறதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் சம்பாதிக்கும் பணம் எல்லாம் வீட்டில் தங்குவது இல்லை. இப்படியான சூழ்நிலை மாறி பணமானது நம்மை தேடி வரும் சூழ்நிலையை உருவாக்க ஆன்மீகம் பல பரிகாரங்களை நமக்கு தந்திருக்கிறது அதில் ஒன்று தான் இந்த உப்பு ஜாடி பரிகாரம். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு வீட்டில் கண்டிப்பாக உப்பு ஜாடி இருக்க வேண்டும். இது பரிகாரத்திற்கு மட்டுமல்ல மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளான உப்பு என்பது அனைவர் வீட்டிலும் இருக்கும். அதிலும் கல் உப்பை பயன்படுத்துவது தான் மிகவும் சிறப்பு.

- Advertisement -

அந்த கல் உப்பை பிளாஸ்டிக், சில்வர் போன்ற பாத்திரங்களின் வைக்காமல் பீங்கான் ஜாடியில் வைத்து புழங்கும் போது பணம் வரவு என்பது எப்போதும் இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனவே அனைவரும் வீட்டில் உப்பு ஜாடி வைத்து அதில் உப்பை கொட்டி புழங்க பழகுங்கள்.

பணம் சேர செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு மஞ்சள் நிறத்தில் ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் ஒன்பது கொட்டை பாக்குகள் நல்ல தரமான கொட்டைப்பாக்குகளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் ஐந்து ரூபாய் நாணயம், அத்துடன் சிறிய வெள்ளி நாணயம் (இப்போது கடைகளில் மிகவும் குறைந்த விலையில் வெள்ளி நாணயங்கள் கிடைக்கிறது அதில் ஒன்றை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்).

- Advertisement -

மஞ்சள் துணியில் கொட்டைப் பாக்கு, வெள்ளி காசு, நாணயம், இவற்றை எல்லாம் வைத்து ஒரு முடிச்சாக கட்டி கொள்ளுங்கள். இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பிறகு தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, உப்பு ஜாடியின் உள்ளே முடிச்சை வைத்து விடுங்கள். இதற்கு மேல் நீங்கள் கல் உப்பை கொட்டி உபயோகப்படுத்துங்கள்.

இந்த பரிகார முடிச்சு உங்கள் வீட்டு உப்பு ஜாடியினுள் இருக்கும் போது, அசைவம் சமையலிலும் பயன்படுத்தலாம். அதே போல பெண்கள் மாதவிலக்கு நேரத்திலும் இதை பயன்படுத்தலாம். அதனால் தவறு ஒன்று மில்லை. உங்கள் இந்த முடிச்சு உப்பு ஜாடியின் அடியில் எப்போதும் இருக்க வேண்டும் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: விடாமல் துரத்தி துரத்தி அடிக்கும் தரித்திரம் கூட உங்களை விட்டு ஒரு நொடி பொழுதில் விலகி விடும். உங்கள் உள்ளங்கையில் இந்த 2 பொருட்களை வைத்தால்.

இந்த முடிச்சு உப்பு ஜாடியில் இருக்கும் போது பணவரவானது உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன், இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -