எவ்வளவு முயற்சி செய்தும் உங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லையா? இதோ இந்த பரிகாரத்தை செய்து விட்டு சேமிக்க தொடங்குங்கள். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் சேமிப்பு பணம் உயரும்.

- Advertisement -

பணம் சேமிப்பு என்பது பொதுவாகவே மிகவும் நல்ல ஒரு விஷயம் அவசியமானதும் கூட. வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அது இல்லா விட்டால் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது மிக மிக கடினம். சம்பாதிப்பது எவ்வளவு கடினமோ அதே அளவுக்கு சேமிப்பதும் கடினம். அந்த சேமிப்பையும் எல்லோராலும் சரியாக சேமித்து அதை சரியான முறையில் செலவு செய்து முன்னேறிட முடியாது. அதற்கும் சில முறைகள் உண்டு சேமிப்பு பணத்தை சரியான செலவிற்கு, சரியான நேரத்தில் செய்தால் மட்டுமே சேமிப்பின் பலனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். ஆனால் ஒரு சிலருக்கு சேமிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் முயற்சியும் எடுப்பார்கள், ஆனால் ஏனோ அவர்களால் அதை முழுவதுமாக செய்ய முடியாது. எந்த ஒரு சேமிப்புக்கான வேலையை தொடங்கினாலும் அதை பாதியிலே நிறுத்தி விடுவார்கள். இந்த பரிகாரத்தை செய்த பிறகு சேமிக்க பழகும் போது, எதற்காக நீங்கள் சேமிக்க தொடங்குகிறீர்களோ அதன் பலன் முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முன்பெல்லாம் சேமிப்பதற்கு உண்டியல் தான் பயன் படுத்தி வந்தார்கள். சேமிப்பு என்றததும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது உண்டியல் தான். பெருமளவில் அளவு சேர்ப்பவர்களுக்கு உண்டியல் சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆகையால் உண்டியல் இருந்தால் அதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நீங்கள் வேறு ஏதாவது ஒரு பொருளோ அல்லது உங்களுக்கு பிடித்த நிறத்தில் உள்ள ஏதோ ஒரு துணியில் மூட்டையாகவோ இப்படி உங்களுக்கு வீட்டில் நீங்கள் பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் அதை எப்படி எதில் சேர்க்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு சிலர் மணி பர்ஸ் கூட ராசி பார்த்து வைத்து இருப்பார்கள். அதில் கூட நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த சேமிப்பு பரிகாரத்தை செய்ய புதன்கிழமை மிகச் சிறந்த நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற ஒரு பழமொழியே உண்டு. புதன்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பரிகாரத்தை செய்து நீங்கள் சேமிக்க தொடங்கும் போது உங்கள் சேமிப்பு பணம் பல மடங்கு உயரும்.

புதன்கிழமை காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்த பிறகு, உங்கள் பூஜை அறையில் நீங்கள் விளக்கேற்றி வைத்து விட்டு எதில் நீங்கள் சேமிக்க போகிறீர்களோ அந்த பொருளை தெய்வத்தின் முன் வைத்து வணங்கி விட்டு அதில் முதலில் ஐந்து வெந்தயம், ஐந்து கல்கண்டு, ஒரே ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் போட்ட பிறகு அதில் 21 ரூபாய் அது 21 நாணயங்களாக இருக்கலாம் இல்லை இரண்டு பத்து ரூபாய் தான் ஒரு ரூபாய் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தொகை 21 ரூபாயாக இருக்க வேண்டும் இது மட்டும் தான் முக்கியம். இந்த நான்கு பொருளையும் உங்களின் முதல் சேமிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சேமிப்பு தெய்வம் சம்பந்த பட்டது என்றால் அதை பூஜை அறையில் வைத்து சேமிப்பது மிகவும் நல்லது. இதை உங்களுடைய சொந்த உபயோகத்திற்காக ஏதோ ஒரு பொருள் வாங்க அல்லது படிப்பிற்கு வேறு கடவுள் தவிர்த்து வேறு எதுக்காக நீங்கள் சேமிப்பதாக இருந்தாலும் பூஜை அறையில் வைத்து சேமிக்க கூடாது. உங்கள் வீட்டில் எந்த ஒரு இடத்தில் பணம் வைத்தால் உங்களுக்கு பத்திரமாக இருக்குமோ அங்கு வைத்துக் கொள்ளலாம் இதை வைக்க திசைகள் அதெல்லாம் எதுவும் பார்க்கத் தேவையில்லை.

இப்படி நீங்கள் சேமிக்கும் தொகையிலிருந்து ஏதோ ஒரு அவசரத்திற்கு கட்டாயமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. ஆனால் நீங்கள் எடுக்கும் தொகையை விட இரண்டு மடங்கு தொகையை அதில் சேர்க்க வேண்டும் அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கவே கூடாத செடிகள் என்னென்ன? இந்த செடி எல்லாம் உங்க வீட்டில் இருந்தா நிம்மதியே இருக்காதாம் தெரிஞ்சுக்கோங்க!

இந்த முறையில் நீங்கள் சேமிக்கும் போது எந்த காரணத்திற்காக இதை சேமிக்க தொடர்கிறீர்களோ அந்த காரணமும் சீக்கிரம் கைகூடி வரும். சேமிப்பும் நீங்கள் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாகவே அதில் உங்களுக்கு சேர்ந்திருக்கும். இந்த பரிகாரத்தை நல்ல முறையில் செய்து வாழ்வில் நல்ல நிலையை அடையுங்கள்.

- Advertisement -