இந்த இரண்டு பொருள்களை மட்டும் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால் போதும், உங்களின் பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லும்

cash
- Advertisement -

பணம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை நடத்துவது என்பதே கடினமாக இருக்கும். ஆகவே அல்லும், பகலும் ஓடி, உழைத்து பணத்தை சம்பாதிக்கின்றோம். இப்படி கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதுமா? அதனை தக்க வழியில் பயன்படுத்த வேண்டும். அந்தப் பணம் நம்மிடம் நிலைத்திருக்க வேண்டும். இதற்காக பல சூட்சும வழிகள் இருக்கின்றன. பொதுவாகவே பணம் வைக்கும் பெட்டியில் அல்லது பீரோவில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை வைக்கும் பொழுது அங்கு வைக்கப்படும் பணம் மற்றும் நகை பல மடங்காக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது ஐதீகம். அவ்வாறு பணம் வைக்கும் இடத்தில் இந்த அற்புத 2 பொருட்கள் வைப்பதன் மூலம் பணம் அதிகரிப்பதைக் கண்கூடாக உணர முடியும். வாருங்கள் அவை என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே நல்ல மணம் வீசுகின்ற இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறு எப்பொழுதும் நமது வீட்டையும், பணம் வைக்கும் இடத்தையும் சுத்தமாக, நல்ல நறுமணத்துடன் வைத்திருக்க வேண்டும். அதேபோல் பச்சைக் கற்பூரம் பணத்தை ஈர்க்கும் என்பதும் நமக்குத் தெரிந்ததே. இதற்கு உதாரணமாக திருப்பதியில் எண்ணிலடங்கா பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது, இதற்கு காரணம் அங்கு கொடுக்கக்கூடிய லட்டு மற்றும் கோவிலின் உட்புறம் அனைத்திலும் பச்சை கற்பூரம் பயன்படுத்துவது தான் என்று பலராலும் நம்பப்படுகிறதாம்.

- Advertisement -

பணத்தை ஈர்ப்பது என்றால் நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணம் நம்மிடம் நிலையாக இருப்பதும், அது மட்டுமல்லாமல் வீண் செலவுகள் வராமல் தடுப்பதற்காகவும் தான். இப்படி பணம் நம்மிடம் இருந்து வெளியில் செல்லாமல் இருப்பதற்கும், நாம் கொடுத்த கடன் திரும்பி வருவதற்க்கும் இந்தப் பொருட்கள் துணைபுரிகின்றன.

சிறிய வீடாக இருந்தாலும் பணம் வைக்கும் பீரோவை எப்பொழுதும் வடக்கு திசை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் பல மடங்காக பெருகிக்கொண்டே இருக்கும். அதோடு பணம் வைக்கும் பொழுது அதனுடன் சிறிய துண்டு மாதுளை குச்சியையும், சிறிதளவு மல்லிகை பூவையும் சேர்த்து வைக்க உங்கள் பணம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

- Advertisement -

மல்லிகை:
பூக்களிலேயே அதிகம் வாசனை நிறைந்த பூ இந்த மல்லிகை பூ. மல்லிகை பூ மகா லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பம் உடையதாகும். எந்த இடத்தில் வாசனை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமியும் நிரந்தரமாக வாசம் செய்வாள். எனவே பணத்துடன் இந்த வாசனை மிகுந்த மலரையும் சிறிதளவு சேர்த்து வைக்கும் பொழுது மகாலட்சுமியின் அருள் நமக்கு எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும், பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மாதுளை குச்சி:
மாதுளை மகாலட்சுமி தேவியின் சிறப்பம்சாகும். எனவே மாதுளை மரத்தில் இருந்து சிறிய துண்டு குச்சியை உடைத்து, அதனை எடுத்து வந்து பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த இடத்தில் பணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கான சக்தி பெருகுகிறது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பணம் மற்றும் நகைக்கு குறைவில்லாமல் இருக்கும்.

- Advertisement -