வீட்டில் பணம் தங்குவதற்கு பரிகாரம்

mahalashmi
- Advertisement -

என்னதான் செய்தாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட நிலையாக தங்குவதில்லை. சேமிப்பாக பணத்தை எடுத்து வைத்தால், செலவு வரிசை கட்டி நிற்கிறது. பணத்தை நம்முடைய வீட்டில் நிலையாக தங்க வைக்க என்னதான் செய்வது. இதற்கான வழி தெரியாமல் கஷ்டப்படுபவர்களுக்காக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. நம்பிக்கையோடு பூஜை அறையில் வெறும் 1 ரூபாயை இப்படி வைத்து பாருங்க. நிச்சயம் உங்களுடைய வீட்டில் பணம் நிரந்தரமாக தங்கும்.

பணம் தங்க பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்திருக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் 1 ரூபாய் நாணயம், பிறகு அட்சதை. பச்சரிசியில் கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு, 2 சொட்டு நெய் விட்டு கலந்தால் அர்ச்சதை தயாராகிவிடும். ஒரு கிண்ணத்தில் இந்த அட்சதையை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதன் நடுவே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். இதை அப்படியே பூஜை அறையில் மகாலட்சுமியிடம் வைத்து விட வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பொருட்களை புதுசாக வைத்தால் போதும். வாரம் வாரம் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பிறகு வழக்கம்போல விளக்கு ஏற்றி தீப தூபம் காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த அட்சதை மஞ்சளோடு சேர்ந்து இருக்கக்கூடிய பச்சரிசி, குரு பகவானின் அனுகிரகத்தை முழுமையாக பெற்று தரும். ஒரு ரூபாய் நாணயம் மகாலட்சுமி அம்சம் பொருந்தியது.

- Advertisement -

இந்த இரண்டு பொருளும் சேர்ந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் போது, பணம் காசு வீட்டில் நிலையாக தங்கும். மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் நிலையாக இருப்பாள். குரு பகவானின் அனுகிரகம் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த கோடி நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க தொடங்கிவிடும்.

வெள்ளிக்கிழமை இந்த ஒரு ரூபாய் நாணயத்தை மகாலட்சுமி பாதத்தில் வைத்து பூஜை செய்து அப்படியே விட்டு விடக்கூடாது. தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த கிண்ணத்தில் இருக்கும் பொருட்களுக்கு ஊதுவத்தி காண்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

மகாலட்சுமி எங்க வீட்டில் நிலையாக தங்கனும், என்ற பிரார்த்தனையை தினமும் பூஜை அறையில் வைக்கவும். தினமும் இதை செய்தால் உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் நீங்கும் பணம் காசு நிலையாக தங்கும். வீண் விரைய செலவு குறையும்.

உங்க வீட்டுக்கு ஆசீர்வாதம் வாங்க யாராவது வராங்க. இந்த கிண்ணத்தில் இருக்கும் அட்சதையை எடுத்து அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தீர்கள் என்றால் ஆசீர்வாதம் பெற்றவர்கள் வீட்டிலும் பணம் காசு சேர தொடங்கிவிடும். அதேபோல இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து போட்டு செலவு செய்து விடக்கூடாது.

பணம் வைக்கும் இடத்தில் எப்போதும் செலவுக்காக கொஞ்சம் காசு பணம் இருக்க வேண்டும். வருமானம் இல்லாத போது கையில் பணம் காசு இல்லாத போது, செலவை குறைக்க பார்க்கணும். இருக்கின்ற பணத்தை எல்லாம் துடைத்துக் கொண்டு போய் செலவு செய்யக் கூடாது. இதே போலத்தான் சமையலறையில் இருக்கும் அரிசி பருப்பையும் மொத்தமாக துடைத்து எடுத்து விட்டு, புது பொருளை வாங்காதீங்க.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

கொஞ்சம் கொஞ்சமா சமையல் அறையில் பொருட்கள் இருக்கும்போது சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டியது வீட்டுப் பெண்களின் கடமை. மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் முறைப்படி செய்து வரும் போது உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிலையாக தங்குவாள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -