ஒரு வீட்டின் வடகிழக்கு மூலை இப்படி இருந்தால் வந்த பணம், வந்த வழியிலேயே திரும்பி சென்று விடும். லட்சுமி தேவி வீட்டில் தங்கவே மாட்டாங்க.

gajalakshmi-cash
- Advertisement -

வந்த பணம் வந்த வழி தெரியாமல் வெளியே செல்கிறது என்று எத்தனை பேர் கஷ்டப்படுகின்றோம். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு சில காரணங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் மகாலட்சுமி தேவி நிலைக்காமல் போவதற்கு பின் சொல்லக்கூடிய தவறுகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் கூட அது உங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை தந்துவிடும். மறந்தும் கூட இனி இந்த மாதிரி தவறுகளை செய்யாதீங்க. அது எந்தெந்த தவறு தெரிந்து கொள்வோமா.

குபேரர் குடியிருக்க கூடிய திசை என்றால் அது வடகிழக்கு திசைதான். உங்கள் வீட்டில் வடகிழக்கு திசையில் ஒருபோதும் குளியலரையோ கழிவறையோ இருக்கக்கூடாது. வடகிழக்கு மூலையில் செருப்பை கழட்டி விடக் கூடாது‌. செருப்பு வைக்கக்கூடிய ஸ்டாண்ட், துடைப்பம் போன்ற பொருட்களை வடகிழக்கு மூலையில் வைக்காதீங்க.

- Advertisement -

வடகிழக்கு மூலை எப்போதுமே சுத்தமாக வாசம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் தினமும் ஒரு வாசனை நிறைந்த சாம்பிராணி வத்தியை ஏற்றி வைத்தால் கூட தவறு கிடையாது. வடக்கு திசை சுவற்றில் எப்போதும் ஒரு கண்ணாடியை மாட்டி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் குபேரருடைய இயந்திரத்தை மாட்டி வைப்பது நம் வீட்டிற்கு பணவரவை அதிகரித்து கொடுக்கும்.

பகல் நேரத்தில் ஆரோக்கியமாக இருக்கும் போது எப்போதுமே தூங்கி வழிய கூடாது. பணத்தை கணக்கு வைத்துக்கொள்ளாமல் கண்டபடி தண்ணீராக செலவு செய்யக் கூடாது. அடுத்தவங்களை பார்த்து நிச்சயமா பொறாமை படவே கூடாது. குறிப்பா பணக்காரர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படக்கூடாது. இடது கையில் அடுத்தவர்களுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்காதீங்க. அடுத்தவர்கள் உங்களுக்கு செய்த நன்றியை ஒருபோதும் மறக்காதீங்க.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இந்த தண்ணீரில் முகம் கழுவினால், முகத்தை பிடித்த பீடை விலகும். பணத்தை வசியம் செய்யும் திறமையும் அதிகரிக்கும்.

முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவர்களிடம் இனிமையான வார்த்தையை பேச வேண்டும். உங்கள் வாயில் இருந்து அனாவசியமான கெட்ட வார்த்தைகள் வெளிவரக் கூடாது. காலை மாலை ஆறு மணி அளவில் வீட்டில் தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்த நேரத்தில் மங்களமான இசை ஒலிக்கப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் சுவாமி பாடல்கள் கேட்க வேண்டும்.

கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும். சரியாக ஆறு மணி அளவில் நிலை வாசலில் அமர்ந்து கொண்டு ஊர்கதை பேசக்கூடாது. ஆசையை குறைத்துக் கொள்ளுங்கள். பேராசையும் படாதீர்கள். இவை அனைத்தும் உங்களுடைய குடும்பத்தின் நல்லதற்காக சொல்லப்பட்ட விஷயங்கள் தான். இல்லத்தில் லட்சுமி தேவி குடியேற வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் மேல் சொன்ன விஷயங்களை மறக்காமல் பின்பற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -