இந்த தண்ணீரில் முகம் கழுவினால், முகத்தை பிடித்த பீடை விலகும். பணத்தை வசியம் செய்யும் திறமையும் அதிகரிக்கும்.

face10
- Advertisement -

முகம் எப்போதும் வாட்டத்தோடு இருந்தால், நிச்சயமாக அது நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் தோல்வியை கொடுத்துக் கொண்டே இருக்கும். முகம் பார்ப்பதற்கு வசீகரமாக அழகான தோற்றத்தில் இருக்க வேண்டும். அழகான தோற்றம் என்றால் வெள்ளை நிறம் கிடையாது. கலையாக இருக்க வேண்டும். சில பேருடைய முகத்தை பார்த்த உடனேயே பிடிக்கும். சில பேருடை முகத்தை பார்க்கும் போது அந்த தேஜஸ் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தாலும் நீ கலையாக இருக்கிறாய் என்று சொல்லக்கூடிய முகம் இயற்கையாக சில பேருக்கு தான் அமையும். முகத்தில் தெளிவே இல்லை எப்போதும் சோர்வு இருக்கிறது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய முகம் பொலிவு பெறும். முகத்தை பிடித்த தரித்திரம் விலகி பீடை விலகி முகத்தில் லட்சுமி கடாட்சம் தோன்றும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் இரண்டு. சுத்தமான மஞ்சள், பன்னீர். பொங்கலுக்கு எல்லாம் சுத்தமான பச்சை மஞ்சள் கிழங்கு வைப்போம் அல்லவா. அந்த மஞ்சள் கிடைத்தால் மிகவும் சிறப்பு. அப்படி இல்லை என்றால் சுத்தமான மஞ்சள் தூளை பயன்படுத்துங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சளை போட்டு, கொஞ்சம் பன்னீர் ஊற்றி அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கலந்து, அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை இந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும் என்றால், இரவே இந்த தண்ணீரை தயார் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக எப்போதும் போல சோப்பு போட்டு குளித்து விடுங்கள். இறுதியாக இந்த ஒரு கப் தண்ணீரை எடுத்து உங்களுடைய முகத்தில் நன்றாக பளிசென என தெளித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த தண்ணீரை எடுத்து அப்படியே உங்களுடைய முகத்தில் அடித்து கழுவுங்க. வாரம் தோறும் புதன்கிழமை வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வர உங்களுடைய முகம் வசீகரம் பெறும்.

இதே தண்ணீரை வீட்டின் மூளை முடுக்குகளில் தெளிக்கலாம். வியாபாரமே நடக்காத கடைகளில் தெளித்தால் ஜன வசியம் ஏற்படும் பண வசியம் ஏற்படும். இந்த குறிப்பை ஆண்களும் பின்பற்றலாம். பெண்களும் பின்பற்றலாம். நன்றாக நடந்து கொண்டிருந்த வியாபாரம் திடீரென்று நஷ்டத்தில் போகிறது பக்கத்து கடைக்கு, வரக்கூடிய வாடிக்கையாளர் கூட நம்முடைய கடைக்கு வர மாட்டேங்குறாங்க அப்படிங்கிற பட்சத்துல உங்களுடைய கடைக்கு ஏதோ ஒரு கண் திருஷ்டி பட்டிருப்பதாக அர்த்தம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பெண்களின் வாழ்க்கையில் பெரிய பெரிய துன்பங்கள் வருவதற்கு காரணம், அவர்கள் செய்யும் இந்த ஒரு சிறு தவறு தான்.

அந்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று அல்லது அமாவாசை தினத்தன்று அவசியமாக திருஷ்டி கழிக்க வேண்டும். ஒரு எலுமிச்சம் பழத்தை நான்காக வெட்டி அதன் உள்ளே குங்குமத்தை தடவி கொஞ்சம் கல் உப்பை வைத்து இந்த இந்த எலுமிச்சம் பழத்தை கடையை சுற்றி நான்காக பிரித்து, நான்கு திசைகளிலும் ஒவ்வொரு துண்டு போட்டு விட வேண்டும். இப்படி செய்தால் வியாபாரத்தில் இருந்த கண் திருஷ்டி விலகும்.

வியாபாரம் நல்லபடியாக நடக்கும். மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -