எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் உங்க கையில் தங்கவில்லையா? உங்க பூஜை அறையில் இதை வையுங்க! இனி பணம் தடையில்லாமல் புழங்கும்.

cash-pooja-room
- Advertisement -

மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப சம்பாதித்தாலும் கூட தன் தேவைகளுக்கு மீறிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதனை சமாளிக்க போராடும் மனிதன், சில சமயங்களில் கடவுளை கூட வெறுத்து விடுகிறான். நம்முடைய பூஜை அறையில் இதை வைத்தால் தங்கு தடை இல்லாமல் பணம் புழங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான பொருள் என்ன? யார்? எந்த பொருளை பூஜை அறையில் வைக்க வேண்டும்? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பணம் கையில் புழங்க ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உண்டு. அதை அந்தந்த ராசியினர் கையாளும் பொழுது அதற்குரிய ஆற்றல்களும் வெவ்வேறானவையாக இருக்கிறது. அந்த வகையில் உங்கள் ராசிக்கு நீங்கள் இந்த பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். வீண் விரயங்கள் ஆகாது, பணம் தடை இல்லாமல் புழங்குவதாக நம்பிக்கை உண்டு.

- Advertisement -

மேஷம், விருச்சிகம்:
மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்கு தடை இல்லாத செல்வ வளத்தை பெற தங்களுடைய பூஜை அறையில் வைக்க வேண்டிய ஒரு பொருள் ‘சிவப்பு குங்குமம்’ ஆகும். அதே போல ஒரு சிறிய அளவிலான மண் பானையில் துவரம் பருப்பை நிரம்ப வைக்க வேண்டும். சிவப்பு குங்குமமும், துவரம் பருப்பும் எப்பொழுதும் பூஜை அறையில் இருந்தால் பணத்தடை ஏற்படாது. ட்ரை பண்ணி பாருங்க.

ரிஷபம், துலாம்:
ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் தங்கு தடை இல்லாத பணவரவை பெறுவதற்கு, வருமானம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கு தங்களுடைய பூஜை அறையில் வைக்க வேண்டிய ஒரு பொருள் ‘லவங்கம்’ ஆகும். லவங்கத்துடன் கற்கண்டையும் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வையுங்கள் பணத் தடை வராது.

- Advertisement -

மிதுனம், கன்னி:
மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள் பணத்தடை வராமல் இருக்க, தங்களுடைய பூஜை அறையில் வைக்க வேண்டிய ஒரு பொருள் ‘பால்’ ஆகும். உங்கள் ராசியின் படி ஒரு டம்ளர் பாலை தினமும் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். மேலும் கற்பூரத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு வையுங்கள். அதன் வாசம் உங்களுக்கு பணத்தடையை ஏற்படுத்தாது, லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க செய்யும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தங்களுக்கு உரிய பொருளாக இருப்பது வலம்புரி சங்கும், சாம்பிராணியும் ஆகும். இந்த ரெண்டு பொருட்களை எப்பொழுதும் உங்களுடைய பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள் பணம் தடையில்லாமல் வரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சற்று காஸ்ட்லியான பொருளாக இருந்தாலும் இது நல்ல ஒரு பலன்களை கொடுக்கக் கூடியதாக உங்களுக்கு நிச்சயம் இருக்கும். நீங்கள் பணத்தை தடை இல்லாமல் பெறுவதற்கு உங்களுடைய பூஜை அறையில் சந்தன கட்டை ஒன்றை வாங்கி வைத்து தினம் தோறும் பூஜை செய்யுங்கள்.

மகரம், கும்பம்:
மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் கருங்காலிக் கட்டை வாங்கி வைத்து பூஜையறையில் தினந்தோறும் வழிபட்டு வந்தால் சாலை செல்வங்களும் வந்து சேரும். குலதெய்வ அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். கருங்காலிக் கட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது பூஜை ஸ்டோர்களில் கேட்கலாம்.

மீனம், தனுசு:
மீனம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் குண்டு மஞ்சளை நிரப்பி வையுங்கள். தினமும் இதனை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு வாருங்கள். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து வழி அனுப்புங்கள். தடையில்லாத பண வரவு நிச்சயம் இருக்கும்.

- Advertisement -