பீரோவில் பணம் சேர தாந்த்ரீக பரிகாரம்

mahalashmi3
- Advertisement -

நம் கைக்கு வரக்கூடிய ஒவ்வொரு ரூபாயும், ஒரு லட்ச ரூபாய்க்கு சமம் என்று நினைத்து, அதை சேமித்து வையுங்கள். ஒரு ரூபாய் தானே, இதை வைத்து என்ன செய்யப் போகின்றோம் என்று, அந்த ஒரு ரூபாயை எந்த வீட்டில் அலட்சியப்படுத்துகிறார்களோ அந்த வீட்டில் நிச்சயமாக பணம் தாங்காது. ஒரு ரூபாய் என்றாலும் பணம் தான். லட்ச ரூபாய் என்றாலும் அது பணம் தான்.

ஒவ்வொரு ரூபாயாக சேரும்போது தான் லட்ச ரூபாய் நமக்கு கிடைக்கிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு பணத்தை சேர்த்தால் நிச்சயம் உங்களுடைய வீட்டில் பணம் சேரும். இது மட்டுமல்லாமல் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தையும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது தை மாதம்.

- Advertisement -

இந்த மாதத்தில் நாம் செய்யக்கூடிய பரிகாரம், நமக்கு நல்லதொரு வழியை காட்டிக் கொடுக்கும். உங்கள் வீட்டில் பண கஷ்டம் இருக்கா கடன் சுமை இருக்கா 48 நாட்களுக்கு இந்த மூன்று பொருட்களை உங்கள் வீட்டு பீரோவில் வைத்து பாருங்கள். என்ன அதிசயம் நடக்கிறது என்று. நல்லது மேலும் மேலும் உங்களைத் தேடி வரும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலாம். இந்த பரிகாரத்தை எந்த நாள் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரம் பற்றிய விளக்கத்தினை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்வோம்.

செல்வ வளம் பெருக தாந்த்ரீக பரிகாரம்

முதலில் இதற்கு மூடி போட்டபடி ஒரு கண்ணாடி பாட்டில் தேவை. வீட்டில் காபித்தூள் பாட்டில், ஜாம் பாட்டில் ஏதாவது இருந்தால் அதை பயன்படுத்தலாம். பாட்டிலை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் காய வைத்து விடுங்கள். பிறகு இந்த பாட்டிலுக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டே 1 கைப்பிடி அளவு கொண்டை கடலை போடுங்க. பிறகு 1 கைப்பிடி அளவு பச்சரிசி போடுங்க. 1 கைப்பிடி அளவு துவரம் பருப்பு போடுங்க. இதே வரிசையில் தான் போட வேண்டும்.

- Advertisement -

இந்த பாட்டிலில் ஒரே 1 ரூபாய் நாணயத்தை புதைத்து வையுங்கள். பாட்டிலை மூடி போட்டு மூடி உங்கள் கையில் வைத்துக் கொண்டு மனதார குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யவும். பிறகு உங்களுக்கு பணத்தால் என்ன பிரச்சனை இருக்கிறது. ஏதோ ஒரு பண பிரச்சினை உங்களை ரொம்பவும் வாட்டி வதைக்கும் அல்லவா. அந்த பண பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கடனே உங்களுக்கு இல்லை என்றால் உங்கள் வீட்டில் வருமானம் அதிகமாக வேண்டும். தங்க நகைகள் நிறைய வாங்கக்கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம். இந்த பிரார்த்தனையை முடித்துவிட்டு இந்த பாட்டிலை அப்படியே பீரோவில் வைக்க வேண்டும். பீரோவில் பணம் வைக்கும் பெட்டியிலும் வைக்கலாம், அல்லது நகை வைக்கும் இடத்திலும் வைக்கலாம்.

- Advertisement -

இந்த பாட்டிலை நீங்கள் தயார் செய்து வைத்திருப்பது உங்கள் வீட்டு உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தெரிய வேண்டுமே தவிர, அனாவசியமாக இந்த பரிகாரத்தை அடுத்தவர்களிடத்தில் பகிர வேண்டாம். 48 நாட்கள் இந்த பாட்டில் அப்படியே இருக்கட்டும். உள்ளே இருக்கும் பொருட்களில் ஒன்றும் பூச்சிகள் பிடிக்காது. 48 நாட்களில் உங்கள் வீட்டில் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

வாங்கிய கடனை திருப்பி அடைக்க ஏதாவது வழி கிடைத்திருக்கிறதா, அல்லது உங்கள் வீட்டில் ஏதாவது நல்லது நடக்கிறதா என்பதை கவனித்துக் கொண்டே இருங்கள். பரிகாரத்தை செய்வதற்கு முன்பும், பரிகாரத்தை செய்ததற்குப் பின்பும் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த பாட்டில் அப்படியே உங்க வீட்டு பீரோவில் இருக்கட்டும்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை பழைய பொருட்களை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டுவிட்டு, புது பொருட்களை நிரப்பி மீண்டும் அதே 1 ரூபாயை வைத்து, மீண்டும் வேண்டுதல் வைத்து இந்த பொருட்களை பீரோவில் வைத்து பரிகாரத்தை தொடங்கலாம். பரிகாரத்தை செய்தும் பலன் இல்லை என்பவர்கள் 48 நாட்களுக்குப் பிறகு இந்த பரிகாரத்தை செய்யணும் என்ற கட்டாயம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர செய்ய வேண்டிய தானம்

48 நாட்கள் கழித்து அந்த பொருட்களை எல்லாம் எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டுட்டு பரிகாரத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தால் பணம் வருமா, கஷ்டம் தீருமா, என்று ஒரு துளி சந்தேகம் இருந்தால் கூட பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பலன் கை மேல் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -