நிரந்தரமான பண வரவு கொடுக்கும் புத்தம் புதிய 10 ஆன்மீக குறிப்புகள். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாதவை.

mahalashmi
- Advertisement -

நிரந்தரமாக பண வருவை கொடுக்க எத்தனையோ பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை நாம் முயற்சி செய்து பார்த்திருப்போம். சிலருக்கு சில பரிகாரங்களில் உடனே பலன் கிடைத்தும் இருக்கும். சிலருக்கு சில பரிகாரங்களில் பலன் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படும். அது அவரவர் கர்ம வினையை பொருத்தது. ஆனால் பின் சொல்லப்பட்டுள்ள இந்த வழிபாட்டு முறைகளை, பரிகாரங்களை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து வாருங்கள். நிச்சயமாக ஒரு நாள் இல்லை என்றால் ஒரு நாள் உங்களுக்கும் பணக்கார யோகம் கிட்டும்.

கோவிலில் லட்சுமி தாயாருக்கு வைத்த தாமரை பூவை நம் வீட்டிற்கு கொண்டு வந்து பச்சை நிற பட்டு துணியில் மடித்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் வற்றாத செல்வ வளம் பெருகும்.

- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு வைத்த சந்தனத்தை நாம் பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வர வேண்டும். அந்த சந்தனத்தை தினந்தோறும் நெற்றியில் இட்டு வர பணகஷ்டம் நீங்கும். இந்த சந்தனத்தை சிறிதளவு பணம் வைக்கும் பெட்டியிலும் வைக்கலாம்.

சுவர்ண ஆகர்ஷன பைரவருக்கு அபிஷேகம் செய்ய பன்னீர் வாங்கி கொடுக்க வேண்டும். அப்படி அபிஷேகம் செய்த அந்தப் பன்னீரைக் கொண்டு வந்து நம்முடைய வீட்டிலும் பீரோவிலும் தெளித்தால் வீட்டில் பணம் நகை சேரும்.

- Advertisement -

ஏகாதேசி அன்று நம்முடைய வீட்டிலேயே பெருமாளின் திருபாதத்தை வரைந்து, அதற்கு அர்ச்சனை செய்தால் சொந்த வீடு நிலம் வாங்கக்கூடிய யோகம் நமக்கு கிடைக்கும்.

ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டு, இருக்கக்கூடிய பெருமாளின் முகத்தில் காலை தினந்தோறும் கண் விழித்து வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும்.

- Advertisement -

தமிழ் மாதத்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் மாதத்தில் முதல் திங்கள் கிழமை திருப்பதிக்கு செல்ல வேண்டும். அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதமும் வரக்கூடிய முதல் திங்கட்கிழமை திருப்பதிக்கு செல்ல வேண்டும். 12 மாதமும், 12 திங்கட்கிழமைகள் இப்படி திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

வெள்ளிக்கிழமை மாலை பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த உணவை வாங்கி கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

பூஜை அறையில் இருக்கும் சுவாமிக்கு ஆரத்தி எடுக்கும் போது அதில் சுண்ணாம்பு சேர்க்கக்கூடாது. மனிதர்களுக்கு ஆரத்தி எடுக்கும் போது தான் சுண்ணாம்பு சேர்த்து எடுக்க வேண்டும். சுவாமிக்கு குங்குமம் தண்ணீரில் கரைத்து தான் ஆரத்தி எடுக்க வேண்டும். அதுதான் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

மழை பெய்யும் போது மழை தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்தோலை அந்த மழை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழ தோல் சாறு இறங்கிய அந்த தண்ணீரை வீட்டின் மூடிக்குகளில் தெளித்தால் வீட்டை பிடித்த வறுமை நீங்கும்.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை தான் இருக்கும். நோய் நொடி, மருந்து மாத்திரை உங்களை விட்டு விலகவே விலகாது.

ஒரு சிறிய அகலமான பௌலில் எப்போதுமே 9 எலுமிச்சம் பழங்களை போட்டு, பிரிட்ஜில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் சமையலறையில் டைனிங் டேபிள் மேலே கூட வைக்கலாம். இதை செய்தாலும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும்.

- Advertisement -