கட்டு கட்டாய் கைகளில் பணம் தங்க, உங்களுடைய கையை இந்த தண்ணீரில் கழுவுங்கள். பிறகு கையில் தங்கும் பணத்தை வைத்து கட்டி தங்கமே வாங்கலாம்.

cash
- Advertisement -

இது என்ன கையோ? வந்த பணம் ஒரு ரூபாய் கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் தண்ணீராக செலவாகிறது. பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த கையால் எந்த செயலை செய்தாலும் அது வெற்றி அடையவில்லை. இப்படி தரித்திரம் பிடித்த, கையை அதிர்ஷ்டம் நிறைந்த வளமான செழிப்பான கையாக மாற்றுவது எப்படி. நாம் எதை தொட்டாலும் அது பொன்னாக மாற வேண்டும். அந்த அளவிற்கு உங்களுடைய கைகள் சுத்தமாக வேண்டும் என்றால் இந்த தண்ணீரில் கையை கழுவலாம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு இளநீர், கற்பூரவள்ளி இலைகள் 2 தேவை. 1/2 டம்ளர் அளவு இளநீரில், கற்பூரவள்ளி இலைகளை நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ள வேண்டும். அதனுடைய சாறு ஐந்து நிமிடம் போல அந்த இளநீரில் இறங்கட்டும். அதன் பின்பு இந்த தண்ணீரை கொண்டு உங்களுடைய கையை கழுவிக்கொள்ள வேண்டும். நன்றாக தேய்த்து உள்ளம் கைக்கு முன் பக்கம், பின் பக்கம் இந்த தண்ணீர் படும்படி கழுவி அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் இருங்கள். நல்ல தண்ணீரில் கையை கழுவ வேண்டாம்.

- Advertisement -

பத்து நிமிடங்கள் கழித்து உங்களுடைய கையை சுத்தமான நல்ல தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. மாலை ஆறு மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். பிறகு தொடர்ந்து இந்த தண்ணீரில் கையை கழுவி வர மேலும் மேலும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிக் கொண்டு வரத்தான் செய்யும். முடியாதவர்கள் மூன்று வாரத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மாதம் கழித்தோ அல்லது தேவைப்படும் போது இந்த பரிகாரத்தை நீங்கள் மீண்டும் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கைக்கு வந்த பணம் வீண்விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கும். நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அது துலங்கும்.

- Advertisement -

உடல் அசதியாக உள்ளது கை கால் எல்லாம் வலிக்கிறது. யாருடைய கண் பட்டதோ என்று தெரியவில்லை என்று சில சமயம் சொல்வோம் அல்லவா. அப்படி அடித்துப் போட்ட வலி உடம்பில் உள்ளது. தூக்கம் தூக்கமாக வருகிறது. வேலையே செய்ய முடியவில்லை. மூதேவி அடைந்தது போல முகம் உள்ளது என்றால் இந்த தண்ணீரை சிறிதளவு குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி, அந்த தண்ணீரில் குளித்தால் உடம்பை பிடித்த பீடை அனைத்தும் விலகும். சோம்பேறித்தனம் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

வீட்டில் ஏதோ சண்டை சச்சரவுகள் பிரச்சனை உள்ளது, மன நிம்மதி இல்லை எனும் பட்சத்தில் வீடு துடைக்கின்ற தண்ணீரில் சிறிதளவு இந்த தண்ணீரை ஊற்றி கலந்து வீடு துடைத்தாலும் வீட்டை பிடித்த தரித்திரம் கண் திருஷ்டி அனைத்தும் விலகும். நம்பிக்கை உள்ளவர்கள் சுலபமான இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -