வாழ்க்கையில் பண கஷ்டம் என்பதே உங்களுக்கு வராது. 3 பச்சை கற்பூரத்தை இந்த இடத்தில் வைத்தால்.

cash-pachai-karpooram
- Advertisement -

கையில் காசு இல்லை என்பது வரை செலவுகள் வரவே வராது. இந்த பக்கம் காசு வந்து விட்டால் போதும். அந்தப்பக்கம் செலவுகள் வரிசை கட்டி நிற்கும். கைக்கு வந்த பணம் வந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களும் பூசைகளும் ஏராளம். எல்லோராலும் பரிகாரங்களையும் பூஜைகளையும் பெரிய அளவில் செய்ய முடியாது அல்லவா. எல்லோராலும் செய்ய முடிய கூடிய ஒரு சுலபமான பச்சைக்கற்பூர பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pachai-karpooram1

கடையில் இருந்து பச்சை கற்பூரத்தை வாங்கிக்கொள்ளுங்கள். கொஞ்சம் பெரிய துண்டுகளாக இருக்கும் பச்சை கற்பூரத்தை வாங்கி வைத்துக் கொண்டால் அதிலிருந்து வாசம் அதிகமாக வெளியேறும். அதில் ஒரு துண்டு பெரிய கட்டி பச்சை கற்பூரத்தை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது அந்த மஞ்சள் முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் பண விரையம் குறையும். குபேர மூலையான தென்மேற்கு திசை பச்சைக் கற்பூரம் வாசனையோடு இருக்கும் போது வீட்டிற்குள் பணத்தை ஈர்த்து கொடுக்கும்.

- Advertisement -

இரண்டாவதாக வீட்டிற்குள் துர்தேவதைகள் நுழையாமல் இருக்க வேண்டும். எதிர்மறை சக்திகள் வீட்டில் இருந்தால் வீட்டில் எந்த நல்லதும் நடக்காது. ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு ஸ்பூன் சாதாரண சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகு, இந்த இரண்டு பொருட்களையும் வைத்து நிலை வாசலில் கட்டி வைத்தால் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நுழைய முடியாது. வீடு சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

பச்சை கற்பூரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் பல மடங்காக பெருகி கொண்டே இருக்கும். கூடுமானவரை பத்து நாட்களுக்கு ஒருமுறை பழைய பச்சை கற்பூரத்தை எடுத்துவிட்டு, புதிய பச்சை கற்பூரத்தை வைக்கவேண்டும். மேலே சொன்ன பரிகாரங்களில் கூட, அந்த பச்சை கற்பூரத்தின் வாசம் குறைந்துவிட்டால் பரிகாரத்திற்கு பலன் இருக்காது. பச்சை கற்பூரம் ஒவ்வொரு பத்து நாட்களுக்கு ஒரு முறை புதியதாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும். பச்சை கற்பூரத்தின் வரும் வாசனை எப்போதும் வீசிக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் பரிகாரத்திற்கு பலனுண்டு. பழைய பச்சை கற்பூரத்தை கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டுவிடலாம் தவறொன்றும் கிடையாது.

- Advertisement -

பீரோவில், நகை வைத்திருக்கும் பெட்டி, பணம் வைத்திருக்கும் மணிபர்ஸ், பணம் வைத்திருக்கும் டப்பா இவைகளில் கட்டாயம் ஒவ்வொரு துண்டு பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். நீங்கள் சொத்து பத்திரங்கள் வைத்திருந்தாலும் சரி, அந்தப் பத்திரத்தின் நடுவே ஒரு பச்சை கற்பூரத்தை வையுங்கள். அந்த சொத்து பல மடங்காக பெருகும். சொத்து அடமானத்தில் செல்லாமலும் இருக்கும்.

Kadugu

தினந்தோறும் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைப்போம். தீபம் ஏற்றுவதற்கு முன்பு அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை நசுக்கிப் போட்டு பூஜை அறையில் வைத்தால் இறைசக்தி பலமடங்கு பூஜை அறையில் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒரே ஒரு பச்சை கற்பூரம், நம் வீட்டில் பல பயன்களை கொடுக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. மேல் சொன்ன பரிகாரங்களை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -