பச்சைக் கற்பூரத்தையும் படிகாரத்தையும் வீட்டில் இப்படி வைத்தால் பற்றாக்குறையாகவே இருக்கும் பணம் பல மடங்கு உங்களிடத்தில் சேமிப்பாக தங்கும்.

cash-pachai-karpooram
- Advertisement -

வீட்டில் வரவு செலவு கனவுக்கு பார்த்தாலே அதில் நிச்சயமாக பற்றாக்குறை பட்ஜெட்தான். வரக்கூடிய வருமானம் இதற்கு பத்தவில்லை. அதற்கு பத்தவில்லை. செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. மேலும் மேலும் பணப்பிரச்சனை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும். நம்முடைய தேவைக்கு ஏற்ப பணத்தை சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும். முடியவில்லையா வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்ப செலவைக் கட்டுக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் முதல் வழி. இதை நீங்கள் புரிந்து கொண்டு நடந்தாலே உங்களுடைய வாழ்க்கை சுகமாக இருக்கும்.

நடைமுறை வாழ்க்கையில் நடக்காத நிறைய விஷயங்களை நாம் கற்பனை செய்து கொண்டு அப்படி வாழ வேண்டும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தால் அது நிச்சயமாக நடக்காது. கற்பனையான ஆடம்பர வாழ்க்கையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதர்சனமான வாழ்க்கைக்குள் நாம் வரவேண்டும். பிறகு வாழ்க்கையில் பண கஷ்டம் உங்களுக்கு ஒரு பெரிய கஷ்டமாக தெரியாது. சரி, பணத்தை அதிகம் சம்பாதிக்க இப்போது ஒரு பரிகாரத்தை பார்த்துவிடுவோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு தேவையான பொருள் 2. சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு சிறிய துண்டு படிகாரம். முதலில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையை எழுத வேண்டும். அது எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, கடன் தொல்லை ஆக இருக்கலாம். வேலை கிடைக்காமல் இருக்கலாம். வருமானம் குறைவாக இருக்கலாம். உங்கள் வீட்டில் சுப காரிய தடை இருக்கலாம். உங்கள் பிள்ளை சரியாக படிக்காமல் இருக்கலாம். எதுவாக இருக்கட்டும்.

எடுத்து வைத்திருக்கும் வெள்ளை காகிதத்தில் உங்களுடைய பிரச்சனையை சுருக்கமாக எழுதி அந்த காகிதத்திற்கு நடுவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த பேப்பரை மடித்து கொள்ளுங்கள். இந்த பேப்பரில் ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்யும்போது நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை மட்டும் மனதார நினைத்து கொண்டால் போதும். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும். குறிப்பாக அந்த பேப்பரில் உங்களுடைய பிரச்சினையை எழுதி வைத்துள்ளீர்கள் அல்லவா.

அந்த பிரச்சனையை இந்த பிரபஞ்சம் சீக்கிரத்தில் தீர்த்துக் கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -