இந்த ஒரு வார்த்தையை பணம் வைக்கும் பெட்டியில் இப்படி எழுதி வைத்தால் பணம் தானாக சுரக்க ஆரம்பிக்கும். நீங்களே நினைத்தாலும் வருமானத்திற்கு தடைபோட முடியாது.

gaja-lakshm
- Advertisement -

தண்ணீர் சுரப்பது போல, அதாவது கிணற்றில் தண்ணீர் ஊற்று எடுப்பது போல நம்முடைய வீட்டில் பணம் பல மடங்கு பெருகி கொண்டே இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணத்தை பலமடங்காக பெருக்குவதற்கு நாம் எந்த பரிகாரத்தை செய்தாலும் அதோடு நம்முடைய விடா முயற்சியை கைவிடக் கூடாது. தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது. பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைத்து விட்டு, பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய வீட்டில் பணம் சுரந்து கொண்டே இருப்பதை உணர முடியும்.

பணம் வைக்கும் பெட்டியில் மட்டும் தான் இந்த வார்த்தையை எழுத வேண்டுமா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. பணம் வைக்கும் இடம், பூஜை அறை, சமையல் அறை, படிக்கின்ற அறை, இதில் எந்த நல்லது அதிகமாக உங்களுக்கு நடக்க வேண்டுமோ, அந்த நல்லது பல மடங்காக பெருக இந்த ஒரு வார்த்தையை, அந்த இடத்தில் எழுதி வைக்க வேண்டும். எல்லா இடத்திலும் உங்களுக்கு முன்னேற்றம் தேவை என்றால் இப்படி எல்லா இடத்திலும் இந்த வார்த்தையை எழுதி வைக்கலாம்.

- Advertisement -

அல்ல அல்ல குறையாமல் கொடுக்கக்கூடிய பாத்திரத்தை தான் அட்சய பாத்திரம் என்று சொல்லுவார்கள். ‘அட்சயம்’ என்ற ஒரு வார்த்தைக்கு அத்தனை சக்தி உள்ளது. ஒரு பொருளை பல மடங்காக பெருகி கொடுக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வார்த்தையைத் தான் நாம் பணம் வைக்கும் பெட்டியில் எழுதி வைக்கப் போகின்றோம். பணம் வைக்கும் பீரோவில் இதை எழுத முடிந்தாலும் எழுதலாம். அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி மடிக்காமல் அப்படியே திறந்தபடி பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

சுத்தமான சந்தனத்தில் பன்னீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த சந்தனம் மணக்க மணக்க இன்னும் வாசமாக இருக்கும். அந்த சந்தனத்தை உங்களுடைய வலது கை மோதிர விரலால் தொட்டு அட்சயம் என்ற வார்த்தையை எழுத வேண்டும். மேல் சொன்ன படி பணம் வைக்கும் பெட்டியில் எழுத வசதி இருந்தால் அப்படியே எழுதிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பேப்பரில் எழுதி பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தது சமையலறையில், அடுப்புக்கு மேல் பக்கத்தில் சுவர் இருக்கும் அல்லவா, அந்த இடத்தில் இந்த சந்தனத்தை தொட்டு அட்சயம் என்று எழுதி வைத்தால் நம்முடைய வீட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமே வராது. குழந்தைகள் படிக்க கூடிய புத்தகங்கள் வைக்க கூடிய இடத்தில் இதேபோல ஒரு வெள்ளைக் காகிதத்தில் அட்சயம் என்று எழுதி அந்த இடத்தில் வைத்தால், குழந்தைகளுக்கு கல்வி செல்வம் நிறைவாக கிடைக்கும்.

அட்சயம் என்ற ஒரு வார்த்தைக்கு அப்படி ஒரு மதிப்பு உண்டு. இதை சொன்னால் நிச்சயமாக உங்களால் உணர முடியாது. ஒரு காகிதத்தில் எழுதி வைத்து பாருங்கள். நன்மைகள் பல மடங்கு பெறுவதை உணர்வீர்கள். நம்பிக்கையோடு செய்யக்கூடிய பரிகாரம் நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருதுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -