தினமும் இந்த மந்திரத்தை பூஜை அறையில் ஒரு முறை சொல்லுங்கள். நீங்களும் பணக்காரர் ஆகலாம்.

mahalashmi1
- Advertisement -

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை கனவு நம்மில் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆசைகள் எவ்வளவு இருக்கின்றதோ, கடின உழைப்பும் அவ்வளவு இருக்க வேண்டும். நம்முடைய குடும்பம் வறுமை இன்றி எப்போதும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால், நாம் எந்தெந்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், நம் வீட்டு பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு நாம் எந்த மந்திரத்தை உச்சரித்தால் பண கஷ்டம் தீரும், என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை பார்த்துவிடுவோம். வாரம்தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று கடையிலிருந்து வாசனை நிறைந்த சுத்தமான தாழம்பு குங்குமத்தை வாங்கி அந்த குங்குமத்தை வெள்ளிகிழமைகளில் அம்பாள் கோவிலில் தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் கோதுமை மாவை அரைப்போமா சமைப்பதற்கு. அந்த கோதுமை மாவில் 7 துளசி இலைகளையும், 2 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்படி அரைத்த கோதுமை மாவு வீட்டில் தீராமல் நிறைவாக இருக்கும் வரை, உங்களுடைய வீட்டில் பணமும் நிறைவாக இருக்கும்.

தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமியின் சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று அந்த மகா லட்சுமி தாயாருக்கு மல்லிகைப் பூ மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். பண வரவு அதிகரிக்கும்.

- Advertisement -

வளர்பிறையில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு பட்டு புடவை எடுத்துக் கொடுத்து வழிபாடு செய்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். வாழ்வில் நிறைவான செல்வவளம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக நம் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பார்த்துவிடுவோம்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். ஒரு முறைக்கு மேல் உங்கள் இஷ்டம் போல எத்தனை முறை உச்சரித்தாலும் தவறு கிடையாது. பணவரவை கொடுக்கும் மந்திரம் இதோ.

சித்தர் துதி ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்திசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக.

அனைவரும் மேல் சொன்ன ஆன்மீக ரீதியான விஷயங்களை நம்பிக்கையோடு கடைபிடித்தால் நிச்சயம் கைமேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -