வெந்தயத்தை இந்த இடத்தில் வைத்தால், கைநழுவி சென்ற பணம் கூட கையோடு வந்து சேரும்.

vendhayam
- Advertisement -

நம்மை அறியாமலேயே ஏதேதோ செலவுக்காக நம் கையில் சேமித்து வைத்திருந்த பணம் கையை விட்டு நழுவிச் சென்று விடும். இப்படி கணக்கு தெரியாமல் செலவான பணம், கணக்கு தெரியாமல் நம் கைக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும் என்றால், இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம். ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால் நஷ்டமான பணத்தை எல்லாம் ஈடு கட்டுவதற்கு உண்டான வழிமுறைகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். மிக மிக எளிமையான பரிகாரம்தான். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

பணம் தரும் வெந்தய பரிகாரம்:
வெந்தயத்திற்கு இயற்கையாகவே ஒரு தன்மை உண்டு. அதை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, அரைத்தால், மொழு மொழுவென பசை போல இருக்கும் அல்லவா. பசை போல இருக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த வெந்தயம் பணத்தையும் பசை போல நம்மிடத்தில் ஒட்டச் செய்யும் தன்மை கொண்டது. அதனால் தான் இந்த வெந்தயத்தை பண ஈர்ப்புக்காக நாம் பயன்படுத்துகின்றோம்.

- Advertisement -

மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு சதுர வடிவில் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். காட்டன் துணியாக இருந்தால் சிறந்தது. அதில் 1 ஸ்பூன் பச்சரிசி, 1 ஸ்பூன் வெந்தயம், 1 சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து மூட்டையாக கட்டி, இதை பணம் வைக்கும் இடங்களில் வைத்தால், செலவான பணம் மீண்டும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து சேரும்.

கல்லாப்பெட்டி, பீரோ, பர்ஸ் என்று நீங்கள் எந்த இடத்தில் எல்லாம் பணம் வைப்பீர்களோ, தனித்தனியாக ஒவ்வொரு முடிச்சை தயார் செய்து, தனித்தனியாக ஒவ்வொரு இடத்தில் வைக்கலாம். இந்த முடிச்சை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். உள்ளே இருக்கக்கூடிய பொருட்களில் வண்டு பிடிக்கிறது எனும் போது மட்டும் அந்த பொருட்களை மாற்றி வையுங்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை வீட்டில் விளக்கு ஏற்றும் போது ஒரு சிறிய அளவு ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பிக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் நீங்கள் இந்த முடிச்சை வைத்திருந்தால் ஜாக்கிரதையாக ஊதுவத்தியை வாரத்தில் இரண்டு நாள் இந்த முடிச்சுக்கு காண்பித்து வந்தால் மகாலட்சுமி அந்த இடத்தில் நிலையாக தங்கி விடுவாள்.

எப்போதும் போல சொல்வதுதான்.  இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருந்தால் பணம் கூரையை பிச்சிக் கொண்டு கொட்டாது. உங்களுடைய உழைப்பு உங்களுடைய விடா முயற்சி இவைதான் உங்களுடைய மூலதனமே தவிர, இந்த பரிகாரம் எதிர்மறை ஆற்றலை நீக்கி வரக்கூடிய தடைகளை தகர்க்கக் கூடியது. அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: தாராளமாக பண வரவை தரும் தாமரை! தாமரைப் பூவை வீட்டில் இப்படி வைத்தால் பணக்கஷ்டம் தீரும் என்பது தெரியுமா உங்களுக்கு?

பத்து முறை முயற்சி செய்தும் வெற்றி பெறாத ஒரு காரியம்,  இரண்டு முறை முயற்சி செய்யும்போது வெற்றி அடையும். அந்த வேலையை இந்த முடிச்சு பார்த்துக் கொள்வோமே தவிர, மேஜிக் போட்ட மாதிரி எல்லாம் பணம் வந்து கொட்டாது என்ற இந்த தகவலையும் முன்வைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -