தாராளமாக பண வரவை தரும் தாமரை! தாமரைப் பூவை வீட்டில் இப்படி வைத்தால் பணக்கஷ்டம் தீரும் என்பது தெரியுமா உங்களுக்கு?

lakshmi-lotus
- Advertisement -

பூஜைக்கு உகந்த மிக மிக அருமையான மலர் தான் இந்த தாமரை பூ. அதிலும் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பூ இந்த தாமரை பூ. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், இந்த தாமரைப் பூவுக்கு இன்னும் சில மகத்துவங்கள் இருக்கின்றன. அந்த மகத்துவத்தை முழுமையாக நாம் பெற வேண்டும் என்றால் தாமரை பூவை நம்முடைய வீட்டில் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஒரே ஒரு பூ, உங்களுடைய குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா, தொடர்ந்து மூன்று மாதங்கள் பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி பார்த்தால் அது உங்களுக்கே புரியும்.

தாராளமாக பண வரவை தரும் தாமரைப்பூ பரிகாரம்:
வெள்ளிக்கிழமை என்றால் அந்த பூஜையில் தாமரைப்பூ வைப்பது மிக மிக சிறப்பு. தாமரை பூ கிடைப்பது மிக மிக அரிது என்று சொல்லக்கூடாது. பூக்கடைக்காரரிடம் சொன்னால் நிச்சயமாக உங்களுக்கு தாமரை பூவை கொண்டு வந்து கொடுப்பார்கள். வெள்ளிக்கிழமை பூஜையில், பூஜை அறையில் மகாலட்சுமிக்கு தாமரை பூவை சூட்டி பூஜை செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம், கடன் சுமை இருக்காது.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு உருளி எடுத்துக் கொள்ளுங்கள். உருளி இல்லையா. அகலமான கண்ணாடி பவுல், பீங்கான் பவுல் எது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரில் சிறிது பச்சைக் கற்பூரம் துளசி இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். இது மகாலட்சுமி பெருமாளின் தீர்த்தம் என்றே சொல்லலாம். இந்த தீர்த்தத்தில் விரிந்த அழகான தாமரை பூவை போட்டு அப்படியே உங்களுடைய வரவேற்பறையில் நடுவில் வைத்து விட வேண்டும். ஒரு ஸ்டூல் போட்டு இந்த கிண்ணத்தை அலங்காரம் செய்து வைத்து விடுங்கள் அவ்வளவுதான்.

தாமரைப்பூ தண்ணீரில் இருப்பதால் மூன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு நிச்சயமாக வாடாமல் தான் இருக்கும். ஆகவே அந்த பூவை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தண்ணீர் சுத்தமாகவே இருந்தால் தண்ணீரையும் மாற்ற வேண்டாம். இந்த தாமரை பூ உங்களுடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எல்லாம் கிளன்சிங் செய்து விடும்.

- Advertisement -

பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றலை ஈர்த்து உங்கள் வீட்டிற்கு கொடுக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யும். சண்டை சச்சரவை குறைக்கும். சந்தோஷத்தை அதிகப்படுத்தும். நிறைய வீடுகளில் குடும்பத்தில் பயங்கரமான குழப்பம் இருக்கும். சில வீடுகளில் நோய்நொடி பிரச்சனை இருக்கும். மருந்து மாத்திரை மருத்துவர் என்றே இருப்பார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்காது. சோம்பேறித்தனம் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட இந்த ஒரு தாமரை பூ நல்ல தீர்வினை கொடுக்கும்.

தாமரைப் பூ கிடைக்கும் போது கட்டாயமாக அதை வாங்கி தண்ணீரில் போடுங்கள். உங்களுடைய கண்ணில் பட்டால் அந்த தாமரை பூவை வாங்காமல் விட்டு விடாதீர்கள். தாமரைப் பூ கிடைக்காத பட்சத்தில் சிவப்பு நிறத்தில் பன்னீர் வாசம் வீசக்கூடிய ரோஜாவை இப்படி தண்ணீரில் மிதக்க விடலாம். இதுவும் நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடியதுதான். ஆனால் தாமரை பூவுக்கு முதலிடம்.

இதையும் படிக்கலாமே: தினமும் பயன்படுத்தும் பொருட்களில் இந்த பொருட்கள் மட்டும் இரும்பினால் இருக்கக் கூடாது தெரியுமா? இரும்பு ஆபத்தை தருமா?

இனி தாமரை பூவை எங்கு பார்த்தாலும் வாங்கி விடுவீர்கள் அல்லவா. அதற்காகவும் செலவை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு பணம் கொடுத்து நீங்கள் தாமரை பூவை வாங்குகிறீர்களோ, செலவு செய்த பணத்தை மீண்டும் அந்த மகாலட்சுமி இரட்டிப்பாக உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவாள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -