இந்த திசையில் பணத்தை வைத்தால் பணம் தண்ணீர் போல செலவாகிக் கொண்டே தான் இருக்கும். பணத்தை சேமித்து வைக்கக் கூடாத திசை எது.

cash2
- Advertisement -

நிறைய வருமானம் வருகிறது. ஆனால் வந்த வருமானத்தை எங்களால் சேமிக்க முடியவில்லை. கையிலிருக்கும் பணம் தண்ணீராக செலவாகின்றது எனும் பட்சத்தில், பணத்தை எந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். எந்த இடத்தில் பணத்தை சேமித்து வைக்கக்கூடாது, என்பதை பற்றிய சின்ன ஆன்மீக ரீதியான தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. இதோடு நிறைய பணம் சேருவதற்கான ஒரு தாந்த்ரீக பரிகாரமும் இந்த பதிவின் இறுதியில் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பயன் பெறலாம்.

முதலில் சேமிப்பு, செலவாகாமல் இருக்க பணத்தை எந்த திசையில் வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டில் சேமிப்பதற்காக வைக்கக்கூடிய பணத்தை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் தென்மேற்கு மூலையில்தான் பீரோ இருக்கும். தென்மேற்கு மூலையில் வைக்கக்கூடிய பணத்தை அடிக்கடி எடுத்து செலவு செய்யக்கூடாது.

- Advertisement -

சேமிப்பு தொகையை அடிக்கடி எடுத்து செலவு செய்யும் போது, அந்தப் பணம் மொத்தமும் வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பு தொகை என்று தனியாக எடுத்து தென்மேற்கு மூலையில் பீரோவில் வைத்து விடுங்கள். அந்த பணத்தை அடிக்கடி தொடாதீங்க.

செலவு செய்வதற்காக என்று கொஞ்சம் பணத்தை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளலாம். செலவுக்காக வைக்ககூடிய பணத்தை வடமேற்கு திசையில் வைத்துக்கொள்ளலாம். வடமேற்கு திசையில் வைக்க கூடிய பொருள் சீக்கிரம் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். அதாவது உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு பொருளை விற்க வேண்டும் என்று இருந்தால், அந்த பொருளை எடுத்து வடமேற்கு மூலையில் வைத்தால் அந்த பொருள் சீக்கிரமே விற்பனையாகி விடும். வாகனம், வீடு, நிலம் இவைகளின் பத்திரங்களை வடமேற்கு மூலையில் வைக்கும் போது அந்த பொருள் சீக்கிரமே விற்பனையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய தங்க நகைகளை இந்த வடமேற்கு மூலையில் வைக்கக் கூடாது.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு தாந்த்ரீக பரிகாரம். பணம் சேமிப்பு அதிகரிப்பதற்காக வருமானம் அதிகரிப்பதற்காக. சிறிய டப்பாவில் 1 கைப்பிடி அளவு துவரம்பருப்பு, 1 கைப்பிடி அளவு வெள்ளை மொச்சை, 1 ஸ்பூன் வெல்லம் அல்லது சர்க்கரை, போட்டு இதோடு ஒரு ரூபாயை வைத்து, ஒரு வெள்ளைக் காகிதத்தில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற வாக்கியத்தை எழுதி, அந்த டப்பாவில் போட்டு மூடி தென்மேற்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

இந்த டப்பாவை மூடி போட்டு அப்படியே வைத்துவிடலாம். 6 மாதத்திற்கு ஒரு முறை உள்ளே இருக்கக்கூடிய பொருட்களை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து அப்படியே பசுமாட்டு தொட்டியில் கொட்டி விடுங்கள். மீண்டும் அந்த மூன்று பொருட்களையும் புதியதாக போட்டு, டப்பாவை மூடி மீண்டும் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். (எழுதி வைத்திருக்கும் அந்த பேப்பரையும், 1 ரூபாயையும் மீண்டும் அந்த டப்பாவில் போடலாம்.) இந்த டப்பா தென்மேற்கு மூலையில் இருக்கும் வரை உங்களுடைய சேமிப்பு பல மடங்காக உயர்ந்து கொண்டே செல்லும். இந்த குறிப்புக்கு பிளாஸ்டிக் டப்பாவை விட, கண்ணாடி பாட்டிலை பயன்படுத்தினாலும் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -